Sunday, June 9, 2013

மோடிக் காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ள பா.ஜ.க தலைவர்கள்! நாட்டின் நிலைமை என்னவாகும்? – காங்கிரஸ் கேள்வி!

                         8 Jun 2013 India
 
     புதுடெல்லி:கோவாவில் பாஜகவின் தேசிய செயற்குழு கூட்டம் வெள்ளிக்கிழமை தொடங்கியது. முதல் நாள் கூட்டத்தை பா.ஜ.கவின் மூத்த தலைவர்களான எல்.கே.அத்வானி, ஜஸ்வந்த்சிங் ஆகியோர் புறக்கணித்துள்ளனர். இதற்கு எல்.கே.அத்வானி உடல்நிலை சரியில்லாததால் கலந்துகொள்ளவில்லை என்று பா.ஜ.க மழுப்பியுள்ளது. இதுக்குறித்து காங்கிரஸ் கட்சி கருத்து தெரிவித்துள்ளது.
 
      காங்கிரஸ் கட்சியின் செய்தித் தொடர்பாளர் ரஷீத் ஆல்வி கூறியது:குஜராத் முதல்வர் நரேந்திர மோடி செயற்குழு கூட்டத்தில் கலந்து கொள்ள வருவதன் காரணமாக பாஜகவின் சில மூத்த தலைவர்களுக்கு காய்ச்சல் ஏற்பட்டுள்ளது. அப்படியென்றால் மோடியின் வரவினால் இந்த நாட்டின் நிலைமை என்னவாக இருக்கும் என்று பாஜக சிந்திக்க வேண்டும் என்று அவர் கூறினார். காங்கிரஸ் கட்சியின் மற்றொரு செய்தி தொடர்பாளரான ஷக்கீல் அஹ்மது பேசுகையில், மோடி குழு பாஜகவில் அத்வானி குழுவை விரட்டிவிட்டது என்று குறிப்பிட்டார்.

0 comments:

Post a Comment