Wednesday, June 5, 2013

ரெட்க்ராஸ் அலுவலகம் மீதான தாக்குதலில் எங்களுக்கு பங்கில்லை – தாலிபான் மறுப்பு!

                          photo_1369976291051_5_0-18qhbpq
 
     காபூல்:கிழக்கு ஆப்கானில் உள்ள ரெட்க்ராஸ் அலுவலகத்தின் மீது தாக்குதல் நடத்தியதில் தங்களுக்கு பங்கில்லை என்று தாலிபான் போராளிகள்அறிவித்துள்ளனர்.ரெட்க்ராஸ் நடத்தும் போலியோ மருந்து விநியோகத்தை தாங்கள் முற்றிலும் ஆதரிப்பதாகவும், தங்களுடைய கட்டுப்பாட்டில் உள்ள பகுதிகளில் ரெட்க்ராஸ் ஆர்வலர்களுக்கு முழு ஒத்துழைப்பை வழங்குவதாகவும் தாலிபானின் செய்தி தொடர்பாளர் காரி யூசுஃப் அஹ்மதி தெரிவித்துள்ளார்.சுதந்திரமாக இயங்கும் எந்த அமைப்பையும் தாங்கள் தாக்கமாட்டோம் என்று அவர் மேலும் கூறியுள்ளார்.
இதனிடையே அரசு ஆதரவுப் பெற்ற ஆயுதக்குழுவுடன் நடந்த மோதலில் 38 தாலிபான் போராளிகள் கொல்லப்பட்டதாக கூறப்படுகிறது. ஆறுமணிநேரம் மோதல் நீடித்ததாக போலீஸ் கமாண்டர் லுத்ஃபுல்லாஹ் கம்ரான் கூறுகிறார்.

0 comments:

Post a Comment