Thursday, March 14, 2013

இஸ்ரேல் ராணுவம் ஃபலஸ்தீன் இளைஞரை சுட்டுக் கொன்றது!

                             14 Mar 2013 Israeli forces Kill Palestinian youth activist Mahmoud al Teeti
 
     ரமல்லா:மேற்கு கரையில் இஸ்ரேல் ராணுவம் நடத்திய அராஜக தாக்குதலில் 22 வயது ஃபலஸ்தீன் இளைஞர் கொல்லப்பட்டார். எட்டுபேருக்கு காயம் ஏற்பட்டது.
 
     ஹெப்ரான் நகரத்திற்கு அருகில் உள்ள ஃபுவாரில் உள்ள ஒரு முகாமில் அத்துமீறி நுழைந்த இஸ்ரேல் ராணுவம் சுட்டதில் மஹ்மூத் அல் தித்தி என்ற ஃபலஸ்தீன் இளைஞர் கொல்லப்பட்டார். இதனை அல்ஜஸீரா தெரிவிக்கிறது.
 
      தலையில் குண்டடிப்பட்டு அல் தித்தி பலியானதாக மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இப்பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த இஸ்ரேல் ராணுவத்தினர் மீது கல்வீசி தாக்கியதைத் தொடர்ந்து இஸ்ரேல் ராணுவம் திருப்பிச் சுட்டதாக இஸ்ரேல் ராணுவ செய்தித் தொடர்பாளர் கூறுகிறார். இவ்வாண்டில் ஆக்கிரமிக்கப்பட்ட மேற்கு கரையில் இஸ்ரேலின் குண்டடி பட்டு மரணிக்கும் 6-வது ஃபலஸ்தீனி மஹ்மூத் அல் தித்தி என்று ஃபலஸ்தீன் அதிகாரிகள் தெரிவித்தனர்.
 
     அமெரிக்க அதிபர் பாரக் ஒபாமா அடுத்த வாரம் இங்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ள உள்ளார். பிராந்தியத்தில் அமைதி ஏற்படுத்த ஒபாமா, ஃபலஸ்தீன் மற்றும் இஸ்ரேல் தலைவர்களுடன் தனித் தனியாக பேச்சு வார்த்தை நடத்துவார் என்று கருதப்படுகிறது.

0 comments:

Post a Comment