Friday, March 22, 2013

அமெரிக்க தீர்மானம் உருப்படாத உருக்குலைந்த தீர்மானம் – கருணாநிதி கோபம்!

                                        22 Mar 2013 கருணாநிதி
 
சென்னை:ஜெனீவா மனித உரிமைகள் பேரவையில் அமெரிக்கா கொண்டுவந்து நிறைவேற்றிய இலங்கை தொடர்பான தீர்மானம் ‘உருக்குலைந்து போன, உருப்படாத தீர்மானம்’ என்று திமுக தலைவர் மு.கருணாநிதி தெரிவித்துள்ளார்.

     காங்கிரஸ் தலைவி சோனியா காந்திக்கு தான் எழுதிய கடிதங்களில், இலங்கையில் ‘இனப்படுகொலை’ நடந்திருப்பதை மூடிமறைக்கக்கூடாது என்றும் அதனை ஒப்புக்கொண்டு இலங்கை அரசு விசாரணைக்கு உட்படுத்தப்பட வேண்டும் என்றும் தான் சுட்டிக்காட்டியதாக கருணாநிதி கூறினார்.

     இவ்வாறான தமது கோரிக்கைகளில் எதையும் ஏற்றுக்கொள்ளாத சூழ்நிலையில், அமெரிக்காவின் தீர்மானத்தால் எந்தவித பலனும் ஏற்படப்போவதில்லை என்றும் திமுக தலைவர் தெரிவித்தார். அமெரிக்கத் தீர்மானம் ஈழத்தமிழர்களைப் பாதுகாக்கக்கூடியது என்று நம்பியிருந்ததற்கு மாறாக, ஜெனீவாவில் நடந்துள்ள நிகழ்வுகளுக்குப் பின்னர் அந்தத் தீர்மானம் ‘நீர்த்துப் போயுள்ளது’ என்று கருணாநிதி கூறினார்.

0 comments:

Post a Comment