Sunday, March 10, 2013

இந்தியாவை எதிர்த்து தனி நாடு கேட்டு போராடலாமா?

மார்ச் 24: தமிழர்கள் தனி நாடு கேட்டு போராட்டம் நடத்த தேவையான அனைத்து காரணிகளும் இப்பொழுது நடந்தேறி கொண்டிருகின்றன. இந்தியா என்கிற ஒரு நாட்டோடு நாம் சேர்ந்திருக்க வேண்டுமா என்கிற கேள்வி ஒவ்வொரு தமிழன் மனதிலும் ஏற்பட தொடங்கி உள்ளது.

     தமிழர்களுக்கு எதிரான நிலை: தமிழக மீனவர்கள் பல்லாயிர கணக்கில் சிங்கள பயங்கரவாத ராணுவத்தால் சுட்டு கொல்லப்பட்டுள்ளனர். இதை (மத்திய) இந்திய அரசு கண்டு கொள்ளவே இல்லை. கூடங்குளம் அணு உலை முதல் காவேரி பிரச்சனை வரை இந்தியா தொடர்ந்து தமிழர்களுக்கு எதிரான நிலையையே கடைப்பிடித்து வருகிறது.

     ஈழத்து இனப்படுகொலை: ஈழத்திலே ஒரு லட்சத்திற்கும் அதிகமான அப்பாவி தமிழ் மக்கள் படுகொலை செய்யப்பட்டுள்ளனர். இதை அண்டை நாடான இந்தியா வேடிக்கை பார்த்ததோடு, இந்த போரை நடத்த தேவையான எல்லா உதவிகளையும் செய்தது. இதன் மூலம் பாலச்சந்திரன் என்ற 12 வயது குழந்தை மட்டுமல்லாது பெண்கள், குழந்தைகள், முதியவர்கள் என்று பல்லாயிரக் கணக்கான மக்கள் அநியாயமாக கொல்லப்பட்டார்கள்.

     ஜனநாயக மறுப்பு, அநியாயத்துக்கு துணை: இலங்கையை கண்டித்து தமிழர்கள் போராட்டம் நடத்தினால் அவர்களை கைது செய்து, உளவுத்துறையை வைத்து மிரட்டுகிறது இந்திய அரசு. இலங்கையோடு உள்ள நட்புறவு பாதிக்கும் என்று சொல்லி போர் குற்றவாளி ராஜபக்சேவுக்கு ரத்தினக் கம்பள வரவேற்பு கொடுகிறது. இலங்கை ராணுவத்திற்கு தமிழர்களை கொன்று குவிக்க பயிற்சி கொடுப்பதோடு, சீனா, பாகிஸ்தான் போன்ற நாடுகளின் பெயரை சொல்லி பூச்சாண்டி காட்டி ஒரு இனத்தையே அழிக்க எல்லா உதவியையும் செய்து வருகிறது.

     அவமதிக்கப்படும் தமிழர்கள்: தங்களது தொப்புள் கொடி உறவுகள் அழிந்து வருவது பற்றி தமிழர்கள் கண்ணீர் வடிக்கின்றனர். ஆனால் இந்தியாவோ இலங்கையை நட்பு நாடு என்று சொல்லி வெந்த புண்ணில் வேல் பாச்சுகிறது. தனது நாட்டின் அங்கமான ஒரு மாநிலத்து மக்களின் உணர்வுகளை மதிக்காமல் இலங்கையை நட்பு நாடு என்று சொல்லி ஆறரை கோடி தமிழர்களையும் கேவலப்படுத்துகிறது இந்தியா. இலங்கை நடத்தியிருப்பது மனித உரிமை மீறல் மட்டுமல்ல, ஒரு இனத்தையே அழிக்கும் செயல். தமிழ் இனம் முழுவதையுமே அழிக்க வேண்டும் என்ற குறிக்கோளுடன் ராஜபக்சே அரசு நடந்து கொண்டிருக்கிறது.

     இப்படிப்பட்ட ஒரு சூழலில் தமிழர்களின் நலன்களை துட்ச்சமாக நினைக்கும் இந்திய நாட்டோடு நாம் இணைந்திருக்க வேண்டுமா? என்பதை பற்றி தமிழர்கள் யோசிக்க தொடங்கி விட்டனர். தமிழ் இளஞ்சர்கள் மனதில் இந்தியாவை எதிர்த்து தனி நாடு கேட்கும் எண்ணம் ஏற்பட தொடங்கி இருக்கிறது. இந்தியா தனது நிலையை மாற்றி கொள்ளவில்லை என்றால் எதிர்காலத்தில் இது நிச்சயம் நடக்கும். thanks, sinthikkavum.

0 comments:

Post a Comment