Tuesday, March 19, 2013

ஐக்கிய முற்போக்கு கூட்டணியிலிருந்து திமுக விலகல்!

                               19 Mar 2013 DMK pulls out of UPA govt over Sri Lanka Tamils issue
 
     சென்னை:ஐ.மு., கூட்டணியில் இருந்து திமுக உடனடியாக வெளியேறுவதாக அக்கட்சித் தலைவர் கருணாநிதி சென்னை அண்ணா அறிவாலயத்தில் அறிவித்துள்ளார். மேலும் ஈழத் தமிழர் போராட்டத்தில் வீரமரணம் அடைந்தவர்களுக்கு வீர வணக்கம் செலுத்துவதாக கருணாநிதி தெரிவித்தார்.
 
     முன்னதாக இலங்கை ஈழத் தமிழர்கள் விவகாரத்தில் திமுகவின் கோரிக்கைகளை மத்திய அரசு பரிசிலீக்கவில்லை என்றும் அதனைத் தொடர்ந்தே கூட்டணியில் இருந்து வெளியேறுவதாக கருணாநிதி குற்றஞ்சாட்டினார். ஈழத்தமிழர் உரிமை, தமிழர்கள் வாழ்வாதரத்திற்காக, 50 ஆண்டுகளுக்கு மேலாக திமுக குரல் கொடுத்து வருகிறது என அவர் தெரிவித்தார்.

0 comments:

Post a Comment