Sunday, March 24, 2013

இலங்கை துணை தூதரகம் திருவனந்தபுரம் மாற்றம்…

chennai-lanka-20130324-1

     இலங்கை தமிழர் பிரச்னை தொடர்பாகவும், யுத்தத்தின் போது நடைபெற்ற சம்பவங்கள் தொடர்பாக சர்வதேச விசாரணை வேண்டும் என்ற கோரிக்கையுடனும், கடந்த இரண்டு வார காலத்துக்கும் மேலாக தமிழகத்தில் அரசியல் கட்சிகள் மற்றும் மாணவர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர். இதனால் சென்னையில் உள்ள இலங்கை துணை தூதரகம் முன்பும் தொடர் போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. சென்னை மாநகர காவல்துறை இலங்கை துணை தூதரகத்துக்கு பலத்த பாதுகாப்பு கொடுத்துள்ளது..
 
     இந்நிலையில் டில்லியில் செயல்பட்டு வரும் இலங்கை தூதரகத்தின் பாதுகாப்பு அதிகாரி ரொஹான் டயஸ் திடீரென கொழும்புக்கு அழைக்கப்பட்டு, அங்கு நடத்தப்பட்ட ஆலோசனையின் முடிவில் சென்னையில் உள்ள துணை தூதரகத்தை கேரளா தலைநகர் திருவனந்தபுரத்துக்கு மாற்ற முடிவு செய்யப்பட்டுள்ளது.
 
     திருவனந்தபுரத்தில், இலங்கை துணை தூதகரம் அமைக்க, கேரளா அரசு ஒப்புதல் கொடுத்துள்ளது.
 
     சென்னையில் செயல்பட்டுவரும் இலங்கை வங்கி தொடர்பாக எந்த முடிவும் எடுக்கப்படவில்லை.
 
மக்கள்செய்திமையம் 24.3.13 மாலை5.15மணி thanks, makkal

0 comments:

Post a Comment