Saturday, March 23, 2013

ஏர்வாடியில் ஆல் இந்தியா இமாம் கவுன்சில் சார்பாக மார்க்க விளக்க பொதுக்கூட்டம்





     நெல்லை மாவட்டம் ஏர்வாடியில் ஹூப்புன் நபி(பிரியாமான நபி)என்ற தலைப்பில் நபிகள் நாயகம் சிறப்பை விளக்கும் மார்க்க விளக்க பொதுக்கூட்டம் ஆல் இந்தியா இமாம் கவுன்சில் சார்பாக நடைப்பெற்றது.
     இந்த பொதுகூட்டதிற்கு ஆல் இந்தியா இமாம் கவுன்சில் மாநில செயற்குழு உறுப்பினர் மற்றும் பெண்கள் அறிவகம் முதல்வர் ஜாபர் ஆலிம் அவர்கள் தலைமை வகித்தார் ,மீரான் முகைதீன் அவர்கள் கிராஅத் ஓதி தொடங்கி வைத்தார்.இமாம் கவுன்சில் மாவட்ட செயற்குழு உறுப்பினர் செய்யதலி மஹ்லரி அவர்கள் பிரியமான நபி என்ற தலைப்பில் சிறப்புரை ஆற்றினார்.நபிகள் நாயகம் கூறிய குடும்பம் என்ற தலைப்பில் இமாம் கவுன்சில் மாவட்ட பேச்சாளர் காஜா ஹுசைன் உஸ்மானி அவர்கள் சிறப்புரை ஆற்றினார் இந்த நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினாராக ஏர்வாடி ஐக்கிய ஜமாஅத் தலைவர் கேப்டன் சாஹிப் மற்றும் பைத்துல் சலாம் செயலாளர் செய்யது அவர்களும் கலந்து கொண்டனர் இறுதியில் ஏர்வாடி நகர தலைவர் காஜா பிர்தௌசி அவர்கள் நன்றியுரை ஆற்றினார்.இந்த நிகழ்ச்சியில் நிகழ்ச்சியில் 300 க்கும் மேற்பட்ட பெண்களும் மற்றும் 100க்கும் மேற்பட்ட ஆண்களும் கலந்து கொண்டனர்

0 comments:

Post a Comment