Monday, March 18, 2013

மண்டபத்தில் மதுக்கடையை திறக்க விடாமல் எஸ்.டி.பி.ஐ கட்சியினர் முற்றுகை

DSC_0130
 
     இராமநாதபுரம் மாவட்டம் மண்டபம் பகுதியில் பல காலமாக பொதுமக்களுக்கு கிழக்கு பகுதியில் இடையூராக இயங்கி வந்த டாஸ்மாக் மதுபானக்கடையினை (கடை எண் 6846)அப்பகுதி எஸ்.டி.பி.ஐ கட்சியினர் இன்று முற்றுகையிட்டனர்.

     மண்டபம் நகர் தலைவர் அபுலா மற்றும் நிர்வாகிகள் ஆகியோர் பொதுமக்களுடன் இணைந்து நடத்திய இப்போராட்டத்தால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.மேலும் மதுபானக்கடையின் வாசலில் அமர்ந்து மதுக்கடையினை அகற்றக்கோரி கோசமிட்டனர்.
2013-03-13 18.17.28 
 
     வெகு நேரமாக நடைபெற்ற இப்போராட்டத்தை தொடர்ந்து ,வருகின்ற மார்ச் 31 இரவு 10 மணிக்குள் மதுபானக்கடை அகற்றப்படும் என்று டாஸ்மாக் மாவட்ட அதிகாரிஅளித்தவாக்குறுதியினை ஏற்று அனைவரும் கலைந்து சென்றனர்.


0 comments:

Post a Comment