Thursday, March 14, 2013

குண்டுவெடிப்புகள்:பா.ஜ.க மாவட்டத் தலைவரை கைது செய்ய என்.ஐ.ஏ தீவிரம்!

                               13 Mar 2013 BJP leader Jitendra Sharma arrest by nia for multi bomb blast case
 
     புதுடெல்லி:இந்தியாவின் பல்வேறு பகுதிகளில் நிகழ்ந்த குண்டுவெடிப்புகளில் தொடர்புடைய ஹிந்துத்துவா தீவிரவாதி லோகேஷ் சர்மாவின் உதவியாளர் விரைவில் கைது செய்யப்படுவார் என்று தேசிய புலனாய்வு ஏஜன்சி(என்.ஐ.ஏ) தெரிவித்துள்ளது.
 
     ஆர்.எஸ்.எஸ் பிரச்சாரக் சுனில் ஜோஷியின் படுகொலை, மக்கா மஸ்ஜித் உள்ளிட்ட பல்வேறு குண்டுவெடிப்புகளில் தொடர்புடைய மத்திய பிரதேச மாநிலம் மோ மாவட்டத்தில் பா.ஜ.க துணைத் தலைவர் ஜிதேந்திர சர்மா என்பவரை கைது செய்ய என்.ஐ.ஏ தீவிரம் காட்டி வருகிறது.
 
     நேற்று முன் தினம் மோவிற்கு வந்த என்.ஐ.ஏ குழு இவரிடம் பல மணிநேரம் விசாரணை நடத்தியது. இவரிடமிருந்து கிடைத்த தகவலின் அடிப்படையில் எஸ்.பி.ஐ மேனேஜரான கோபீசந்த் ஜக்தாபின் வீட்டிற்கு சென்று அவரது மருமகன் திலீப் என்பவரை என்.ஐ.ஏ கைது செய்துள்ளது.

0 comments:

Post a Comment