Thursday, March 21, 2013

மே 5 இல் கர்நாடகா சட்டப்பேரவை தேர்தல்!

                                       21 Mar 2013 Karnataka Assembly polls on May 5, counting on May 8
 
     புதுடெல்லி:கர்நாடகா மாநில சட்டப்பேரவைத் தேர்தல் வரும் மே மாதம் 5ம் தேதி நடைபெறும் என தலைமைத் தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. இதற்கான அறிவிப்பைதலைமைத் தேர்தல் ஆணையர் வி.சம்பத் டெல்லியில் வெளியிட்டார்.

     கர்நாடகா மாநிலத்தில் தற்போது ஜெகதீஷ் ஷெட்டர் தலைமையிலான பாரதிய ஜனதா கட்சி ஆட்சி செய்து வருகின்றது. இதன் ஆட்சிக் காலம் வரும் ஜூன் மாதம் 3ம் தேதியுடன் முடிவடைவகிறது. இதனை கருத்தில் கொண்டு தலைமைத் தேர்தல் ஆணையம் வரும் மே 5 ல் தேர்தல் நடத்துவதாக அறிவித்துள்ளது. 224 தொகுதி கொண்ட அம்மாநில சட்டப்பேரவைக்கு ஒரே கட்டமாக தேர்தல் நடத்தப்படுகிறது. இதற்கான வேட்பு மனுத் தாக்கல் ஏப்ரல் 10-ல் துவங்கி 17ம் தேதியுடன் முடிவடைகிறது.

0 comments:

Post a Comment