Tuesday, January 1, 2013

த.த.ஜ சகோதரர்களே சிறை நிரப்ப நாங்கள் தயார் நீங்கள் தயாரா?

                                        


     உங்கள் இயக்கத்தை சேர்ந்த மூவர் சிறைப்பட்டதும் முற்றுகை சிறை நிரப்பும் போராட்டம் நடத்தும் நீங்கள் ஒட்டு மொத்த முஸ்லிம்களின் கோரிக்கையான பல்லாண்டு காலம் வாடும் சிறைவாசிகளின் கோரிக்கைக்கு இது வரை துரும்பைக் கூட அசைக்காத்து ஏன்?

    உங்கள் இயக்கதினர் மீது காவல் துறை தடியடி நடத்தியதும் ஒட்டு மொத்த சமுதாயமும் அணி திரள வேண்டும் எனும் நீங்கள் 'ஒரு பொதுப் பிரச்சனையில் இவர்கள் ஒன்றுபட்டு போராடிக் காட்டட்டும்' என்ற சவாலை முறியடித்து ஒட்டு மொத்த சமுதாயமும் அணி திரண்ட நபிகளாரை இழிவு படுத்திய அமெரிக்க தூதரக் முற்றுகையின் போது நடந்த தடியடியின் போது குரல் கொடுக்காமல் எங்கள் போராட்டத்தில் இது போல் நடக்குமா? எள்ளி நகையாடியது ஏன்?

    அண்ணன் புற்றுநோயால் பாதிக்கப்பட்டுள்ளார் என்றவுடன் அனைவரும் அவருக்காக குரல் கொடுத்த போது அபுதாகிர் எனும் மரணத்தோடு போராடும் சிறைவாசிக்காக மனிதாபிமானத்தோடு ஒரு அறிக்கை கூட த.த.ஜ கொடுக்காதது ஏன்?

     ப.சிதம்பரம் வீட்டு முற்றுகையில் கைதான ஐ.என்.டி.ஜே.வினரை விடுதலை செய்யக் கோரி அனைத்து முஸ்லிம் அமைப்புகளும் அந்த மண்டபத்தை முற்றுகை இட்ட போது , அதை கேலி பேசிய உங்களின் செயலை மறந்து உங்கள் மீது தடியடி என்றதும் திருவல்லிக்கேணிக்கு ஓடி வந்த ஐ.என்.டி.ஜே. வினரை இழிவு படுத்தி அனுப்பியது ஏன் ?

    உங்களுக்காக வந்த மற்ற இயக்கத்தினரை 'இவர்களின் 23 அமைப்பு நடத்திய வன்முறையால் தான் நமக்கு கெட்ட பெயர் ஏற்பட்டது' என கூறி விட்டு இப்போது அனைவரையும் அழைப்பது ஏன்?

     அதெல்லாம் போகட்டும்! இனி வரும் காலங்களில் இது போன்று சமுதாயப் பிரச்சனைகளில் நாங்களும் கலந்து கொள்வோம் என அறிவியுங்கள் ! ஒட்டு மொத்த சமுதாயமும் உங்களோடு சிறைகளை நிரப்புவோம்! நாங்கள் தயார் நீங்கள் தயாரா?

இவண் -சமுதாயக் கடலின் ஒரு துளி

0 comments:

Post a Comment