Sunday, April 29, 2012

சிறுமி நரபலிக்காக 6 லட்சம் ரூபாய் கொடுத்தேன்: கைதான தி.மு.க. பிரமுகர் பரபரப்பு வாக்குமூலம்


மதுரை மாவட்டம் வாடிப்பட்டி அருகே உள்ள கச்சைக்கட்டியை சேர்ந்தவர் தொத்தன் என்ற தொத்தல், விவசாய கூலி தொழிலாளி. இவரது மனைவி அன்னக்கிளி. இந்த தம்பதிக்கு ராஜலட்சுமி (வயது5) என்ற மகள் இருந்தாள். அங்குள்ள பள்ளியில் 1-ம் வகுப்பு படித்து வந்தார்.  கடந்த 1.1.2011 அன்று வீட்டு அருகில் விளையாடி கொண்டு இருந்த ராஜலட்சுமி திடீர் என மாயமானாள். பெற்றோர் பல இடங்களில் தேடினர். எங்கும் அவளை காணவில்லை. மறுநாள் அதே பகுதியை சேர்ந்த வீரணன் என்பவரின் மாட்டு தொழுவத்தில் ராஜலட்சுமி பிணமாக கிடந்தார்.
 
சிறுமி ராஜலட்சுமி கழுத்து அறுக்கப்பட்டு கொடூரமாக கொலை செய்யப்பட்டு கிடந்தது தெரியவந்தது.   இந்த கொலை தொடர்பாக சந்தேகத்தின்பேரில் அதே பகுதியை சேர்ந்த மலபார் என்ற கருப்பு மற்றும் அவரது தந்தை மகாமுனி (61) ஆகியோரை கைது செய்தனர். அவர்கள் இருவரும் சில மாதங்களில் இறந்துவிட்டனர்.
 
பின்னர் இந்த வழக்கில் தொய்வு ஏற்பட்டது. அதன் பின்னர் இந்த வழக்கை சி.பி.சி.ஐ.டி. விசாரணைக்கு மாற்றி போலீஸ் டி.ஜி.பி. உத்தரவிட்டார். சி.பி.சி.ஐ.டி. போலீசார் தீவிர விசாரணை நடத்தினர். விசாரணையில் சிறுமி ராஜலட்சுமி நரபலிக்காக கொலை செய்யப்பட்டது தெரியவந்தது.
 
இதுதொடர்பாக கச்சக்கட்டியை சேர்ந்த தி.மு.க. பிரமுகரும், மதுரை மாவட்ட ஊராட்சி குழுவின் முன்னாள் துணை தலைவருமான அயூப்கான் (50), முருகேசன் (54), பொன்னுசாமி (22) ஆகிய 3 பேரையும் போலீசார் கைது செய்தனர்.  
 
சிறுமியை நரபலி கொடுத்தது ஏன்? என்பது குறித்து கைதான அயூப்கான் வாக்குமூலம் அளித்தார். அவர் கூறியதாவது:-
 
நான் தனிச்சியம் கிராமத்தில் ராயல் மகளிர் கல்வியியல் கல்லூரி கட்டிடத்தை கடந்த 2 ஆண்டுகளுக்கு மேலாக கட்டி கொண்டு இருக்கின்றேன். அதில் தடை ஏற்பட்டது. இதனால் குழந்தையை நரபலி கொடுத்து அதன் ரத்தத்தை கட்டிட பகுதியில் தெளித்தால் கட்டிடம் வேகமாக கட்டி விடலாம் என நினைத்தேன்.
 
கச்சகட்டி கிராமத்தை சேர்ந்த மலபார் என்ற கருப்பு, பொன்னுச்சாமி, முருகேசன் ஆகியோரை தொடர்பு கொண்டேன்.   அவர்களிடம் நரபலிக்கு ஏற்பாடு செய்யுமாறு கூறினேன். அதற்காக பல லட்சம் ரூபாய் தருவதாக ஆசை வார்த்தை கூறினேன்.
 
அதனை தொடர்ந்து பொன்னுசாமி, மலபார் ஆகியோர் சிறுமி ராஜலட்சுமியை கடத்தி கொண்டு மலபார் வீட்டில் அடைத்து வைத்தனர். சிறுமி காலில் கிடந்த கொலுசை மலபாரின் மனைவி லட்சுமி கழற்றி பொன்னுச்சாமியிடம் கொடுத்தார்.  
 
அதிகாலை 2 மணி அளவில் சிறுமியை மகாமுனி, பொன்னுசாமி, லட்சுமி ஆகியோர் பிடித்து கொண்டனர். மலபார் கத்தியால் சிறுமியின் கழுத்தை அறுத்து ரத்தத்தை ஒரு வாளியில் பிடித்தார். சிறிது நேரத்தில் சிறுமி இறந்து விட்டாள். அதன் பின்னர் ரத்தத்தை கல்லூரி கட்டிடத்தை சுற்றி தெளித்தேன்.
 
சிறுமியை கொலை செய்ததற்காக மகாமுனிக்கு ரூ.4 லட்சமும், பொன்னுச்சாமிக்கு ரூ.2 லட்சமும் கொடுத்தேன்.
 
இவ்வாறு அவர் கூறினார்.  
 
கைது செய்யப்பட்டுள்ள அயூப்கான் கடந்த சில நாட்களுக்கு முன்புதான் நில அபகரிப்பு வழக்கில் கைது செய்யப்பட்டார். ராயல் மகளிர் கல்வியியல் கல்லூரி அருகே உள்ள இடத்தை போலி ஆவணம் மூலம் கைப்பற்றி நிலத்தை அபகரித்ததாக கைது செய்யப்பட்டார். பின்னர் அவர் ஜாமீனில் வெளியே வந்தார்.
 
தற்போது சிறுமியை நரபலி கொடுத்த வழக்கில் கைது செய்யப்பட்டுள்ளார். மேலும் சிறுமி கொலை தொடர்பாக மலபாரின் மனைவி லட்சுமியை போலீசார் தேடி வருகிறார்கள்.
thanks to asiananban

பின்லேடன் கொலையை தேர்தலுக்கு பயன்படுத்தும் ஒபாமா


அமெரிக்க அதிபர் தேர்தல் வருகிற நவம்பர் 6-ந்தேதி நடக்கிறது. அதில் ஆளும் ஜனநாயக கட்சி வேட்பாளராக அதிபர் ஒபாமா மீண்டும் போட்டியிடுகிறார். எதிர்க்கட்சி வேட்பாளராக குடியரசு கட்சியைச் சேர்ந்த மிட்ரோம்னி களம் இறங்குகிறார். இவர் அதிபர் ஒபாமாவுக்கு கடும் போட்டியாக திகழ்வார் என எதிர்பார்க்கப்படுகிறது. 


எனவே பிரசாரம் கடுமையாக இருக்கும் என தெரிகிறது. அதில் சர்வதேச பயங்கரவாதி பின்லேடன் கொல்லப்பட்ட விவகாரம் முக்கிய பங்கு வகிக்கிறது. ஏனெனில் பின்லேடன் அமெரிக்காவின் முக்கிய எதிரியாக இருந்தார். மேலும் அந்த நாட்டின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாகவும் விளங்கினார். அவர் எங்கு ஒளிந்திருக்கிறார் என்பது புதியாத புதிராக இருந்தது. 

அந்த நிலையில் ஒபாமா அரசு தீவிர நடவடிக்கை மேற்கொண்டு பின்லேடனை கண்டுபிடித்து சுட்டுக் கொன்று சாதனை படைத்தது. இதன் மூலம் அமெரிக்காவின் பாதுகாப்பு தன்மை உறுதிபடுத்தப்பட்டுள்ளது. எனவே பின்லேடன் கொலை ஒபாமா அரசின் முக்கிய சாதனைகளில் வரிசையில் ஒன்றாக கருதப்பட்டு பிரசாரத்துக்கு பயன்படுத்தப்பட உள்ளது. 

இதை துணை அதிபர் ஜோபைடன் ஒபாமா அரசின் வெளிநாட்டு கொள்கையை வெளியிடும் போது சூசகமாக தெரிவித்தார்.
thanks to asiananban

ஜாதிவாரியான மக்கள் தொகை கணக்கெடுப்பில் முஸ்லீம்களை பதிவுசெய்வொம்!.

இந்தியா முழுவதும் ஜாதிவாரியாக மக்கள்தொகை எண்ணிக்கையை வைத்துத்தான் இடஒதுக்கீடு உட்பட அனைத்து சலுகைகளையும் அரசு சமூகங்களுக்கு வழங்கி வருகின்றது. 2001-ம் ஆண்டின் மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி இந்தியாவில் முஸ்லீம்கள் 13.4 சதவிகிதமும், தமிழகத்தில் முஸ்லீம்கள் 5.6 சதவிகிதமும் வாழ்ந்து வருவதாக புள்ளிவிவரம் தெரிவிக்கின்றது. ஆனால் அப்போதே பல்லாயிரக்கணக்கான முஸ்லீம்களின் எண்ணிக்கையை இக்கணக்கெடுப்பில் சேர்க்காமல் விட்டுவிட்டனர்.

எனவே தற்போது நடைபெறும் ஜாதிவாரியான கணக்கெடுப்பு நமக்கு ஒரு நல்ல வாய்ப்பாகும். இதில் அனைத்து முஸ்லீம்களின் பெயரும் கண்டிப்பாக பதிவு செய்யப்பட வெண்டும்.

இது நமது எதிர்காலம் சம்பந்தப்ப்ட்ட விஷயமாகும். எனவே ஒவ்வொரு முஸ்லீமின் பெயரும் சேர்க்கப்பட வேண்டும்.

இந்த தகவலை தங்களுடைய பள்ளி ஜும்-ஆவில்  அறிவிப்பு செய்து நம் சமூக மக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும் என  ஜமாத்தின் அனைத்து நிர்வாகிகளையும் அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

குறிப்பு:

கணக்கெடுப்பு வரும் நபர்களிடம் முஸ்லீம் என்று மட்டும் கூறுவது நல்லது. எந்த ஜாதியையும் சொல்ல வேண்டாம் என ஜமாத்தாருக்கு தெரியப்படுத்தவும், ஏனெனில் முஸ்லீம்களின் வழக்கத்தில் இல்லாத பிரிவுகளை கூறி இடஒதுக்கீடு உட்பட அனைத்து சலுகைகளும் தேசிய அளவில் மறுக்கப்பட்டு வருகின்றது என்பதை நாம் கவனத்தில் கொள்ள வேண்டும்.

இப்படிக்கு,

A.ஹாலித் முஹம்மத்,
மாநில பொதுச்செயலாளர்,
பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா, தமிழ்நாடு
thanks to pfi

டெரரிஸ்டுகள் அல்ல மாவோயிஸ்டுகள்!

சென்னை: பயங்கரவாதம் என்பது தேசம் எதிர்கொள்ளும் பிரச்சனைகளில் முக்கியமானதொன்றாகும். காரணம் பயங்கரவாத தாக்குதல்களினால் எண்ணெற்ற உயிர் சேதங்கள், பொருட்சேதங்களும் ஏற்பட்டதோடு மட்டுமல்லாமல் மக்கள் மத்தியில் இந்த பயங்கரவாத தாக்குதல்கள் ஒரு வித பீதியை ஏற்படுத்தியுள்ளது என கூறலாம்.




இந்தியாவில் பயங்கரவாத தாக்குதல்களை நிகழ்த்துவதற்கு சங்கப்பரிவார ஃபாசிஸ்டு தீவிரவாதிகளை விட கொரூரமானவர்கள் உண்டு என்றால் அது கம்யூனிஸ தீவிரவாதமான மாவோயிஸ்டுகள் தான். முக்கிய பிரமுகர்களை கடத்தி கொல்வது, காவல்துறை அதிகாரிகளை கொலை செய்வது, காவல் நிலையங்களுக்கு தீ வைப்பது, பொதுமக்கள் பயணம் செய்யும் இரயில் வண்டிகளுக்கு குண்டு வைத்து கவிழ்த்து ஆயிரக்கணக்கான மக்களை கொன்று குவித்து வருகிறார்கள் மாவோயிஸ்டுகள்.

இந்தியவில் இவர்கள் உருவான காலகட்டத்திலிருந்து இன்றுவரை இவர்கள் செய்த பயங்கரவாத செயல்களை பட்டியலிட தொடங்கினால் எழுதி முடிக்கவியலாது. அந்தளவிற்கு இவர்களது தாக்குதல்கள் இன்னும் தொடர்ந்து கொண்டிருக்கிறது.

இந்தியாவில் மிகப்பெரும் தாக்குதல்களை நிகழ்த்தி வரும் இவர்களை தீவிரவாதிகள் என்றோ, பயங்கரவாதிகள் என்றோ அரசாங்கமும், ஊடகங்களும் குறிப்பிடுவதே இல்லை மாறாக இவர்களை மாவோயிஸ்டுகள் என்று தான் பெரும்பாலும் கூறி வருகிறது.

முஸ்லிம்கள் என்று வரும் பட்சத்தில் சட்டைப்பையில் பிளேடு வைத்திருந்தாலும் கூட அவனை தீவிரவாதியாகவும், பயங்கரவாதியாகவும் சித்தரிக்கிறது இன்றைய ஊடகங்கள். ஏன் இந்த இரட்டை நிலைபாடு? என்று திருந்தப்போகிறதோ இந்த ஊடக உலகம்?

Friday, April 27, 2012

சென்னையில் பயங்கர சப்தத்துடன் வெடித்த வெடி குண்டு...


சென்னை,ஏப்ரல் 27 : ‌கீ‌ழ்‌ப்பா‌க்க‌‌த்‌தில் ‌பழமை வா‌ய்‌ந்த வீ‌ட்டு வச‌தி வா‌ரிய குடி‌யிரு‌ப்‌பு உ‌ள்ளது. ‌இ‌தன் ‌கீ‌ழ்‌ பகு‌தி‌யி‌ல் 10 கடைக‌ள் வாடகை‌க்கு ‌விட‌ப்ப‌ட்டு‌ள்ளது. முத‌ல் மாடி‌யி‌ல் த‌ங்கு‌ம் ‌அறைக‌ள் க‌ட்ட‌ப்‌ப‌ட்டு வாடகை‌க்கு விடப்பட்டுள்ளது. முத‌ல் மாடி‌யிலுள ஒரு அறை‌யி‌ல் தூ‌த்து‌க்குடியை சே‌ர்‌ந்த ச‌த்யா, சுக‌ந்த‌ன் ஆ‌கியோ‌ர் வ‌சி‌த்து வ‌ந்து‌ள்ளன‌ர். நேற்று ந‌ள்‌ளிரவு 1.30 மண‌ி‌க்கு அவ‌ர்க‌ள் த‌ங்‌கி‌யிரு‌ந்த அறை‌யி‌ல் நா‌ட்டு வெடிகு‌ண்டு திடீரென்று வெ‌டி‌த்து‌ள்ளது. பய‌ங்கர ச‌த்த‌த்துட‌ன் வெடி‌த்துச் ‌சித‌றிய வெடி கு‌ண்டா‌ல் ச‌த்யா, சுக‌ந்த‌ன் ஆ‌கியோ‌‌ரி‌ன் ‌கைக‌ள், ‌விர‌ல்க‌ள் து‌ண்டி‌க்க‌ப்ப‌ட்டது. இ‌ந்த ச‌‌த்த‌த்தை கே‌ட்ட அரு‌கிலிரு‌ந்தவ‌ர்க‌ள் அல‌றி அடித்துக் கொண்டு காவ‌ல்துறை‌க்கு தகவ‌ல் த‌ெ‌ரிவித்துள்ளனர். விரை‌ந்து வ‌ந்த காவல்துறையினர் படுகாய‌மடை‌ந்த ச‌த்யாவை செ‌ன்னை அரசு பொது மரு‌த்துவமனை‌யிலு‌ம், சுக‌ந்த‌னை‌ ‌ஸ்டா‌‌‌ன்‌லி அரசு மரு‌த்துவமனை‌யிலும் சிகிச்சைக்காக சேர்த்து‌ள்ளன‌ர். கவலை‌க்‌கிடமான ‌நிலை‌யில் இருக்கும் இருவ‌ரு‌க்கு‌ம் ‌தீ‌விர ‌‌சி‌கி‌ச்சை அ‌ளி‌க்க‌ப்ப‌ட்டு‌ வரு‌கிறது. கு‌ண்டுவெடி‌ப்பு கு‌றி‌த்து காவ‌ல்துறை‌யின‌ர் ‌தீ‌விர ‌விசாரணை நட‌த்‌தி வரு‌கி‌ன்றன‌ர். ச‌த்யா, சுக‌ந்த‌ன் இருவரு‌ம் ‌தூ‌த்து‌க்குடியை சே‌ர்‌ந்த பிரபல ரவுடிக‌ள் எ‌ன்றும், பல்வேறு கொலை வழ‌க்குகளி‌ல் தூ‌த்து‌க்குடி மாவ‌ட்ட காவ‌ல்துறை‌யினரா‌ல் தேட‌ப்ப‌ட்டு வ‌ந்தவ‌ர்க‌ள் என்றும் காவல்துறையினர் தெரிவித்தனர். மேலும், இவர்கள் எத‌ற்காக நா‌ட்டு வெடிகு‌ண்டு வை‌த்‌திரு‌‌ந்தா‌ர்க‌ள் எ‌ன்று காவ‌ல்துறை‌யின‌ர் ‌தீ‌விர ‌விசாரணை நட‌த்‌தி வரு‌கி‌ன்றன‌ர்.
source from: www.muthupettaiexpress.com
தொகுப்பு

ரிப்போர்ட்டர் இல்யாஸ்.ANSN .அப்துல் பாரி, EKA .முனவ்வர் கான்,அபு மர்வா

வீடியோ கேம் வாங்கித் தராத தந்தையைச் சுட்டுக் கொன்ற 4 வயது சிறுவன்

சவுதி அரேபியாவில் தனது தந்தையை 4 வயது மகன் சுட்டுக் கொன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சவுதி அரேபியாவின் தெற்கு ஜிசான் பகுதியில் இந்த சம்பவம் நடந்துள்ளதாக அந்நாட்டு அஸ்ராக் பத்திரிக்கை செய்தி வெளியிட்டுள்ளது.
தந்தையிடம் பல நாட்களாக வீடியோ கேம் வாங்கித் தருமாறு நச்சரித்து கொண்டிருந்த அச்சிறுவன் அலுவலகம் சென்ற தந்தை வெறும் கையுடன் வந்ததை பார்த்து கோபமடைந்துள்ளான்.
தந்தை உடை மாற்றும் போது கீழே வைத்த அவரது துப்பாக்கியை எடுத்து அவரை சுட்டுள்ளான். இதில் தலையில் குண்டு பாய்ந்ததை அடுத்து சிறுவனின் தந்தை சம்பவ இடத்திலே உயிரிழந்தார்.
thanks to manithan.com

சிரியாவில் கட்டடத்தின் மீது நடத்தப்பட்ட தாக்குதலில், 70 பேர் பலி

ஹாமா:சிரியாவில், நேற்று ஆயுதங்கள் சேமிக்கப்பட்டிருந்த கட்டடத்தின் மீது நடத்தப்பட்ட தாக்குதலில், 70 பேர் பலியாயினர்.சிரியாவில், அதிபர் பஷீர் அல் ஆசாத் ஆட்சியை எதிர்த்து, ஓராண்டுக்கும் மேலாக, போராட்டங்கள் நடந்து வருகின்றன. போராட்டக்காரர்களை ராணுவத்தினர் ஒடுக்கி வருகின்றனர். இதில், பல ஆயிரம் பேர் பலியாகியுள்ளனர். இந்நிலையில், ஹாமா மாகாணத்தின் மாஷா அல் தயார் மாவட்டத்தில், போராட்டக்காரர்களால் ஆயுதங்கள் சேமித்து வைக்கப்பட்டிருந்ததாகக் கருதப்படும் கட்டடத்தின் மீது நடத்தப்பட்ட ஏவுகணை தாக்குதலில், அந்த கட்டடம் தரைமட்டமானது.உள்ளே இருந்த வெடிமருந்து பொருட்கள் வெடித்ததில், 70 பேர் வரை பலியாகியுள்ளனர். ஆனால், 16 பேர் மட்டும் பலியானதாக, அரசு தரப்பில் கூறப்பட்டுள்ளது.
thanks to asiananban

ஆசியாவை குறிவைக்கும் அமெரிக்க உளவுப் பிரிவு !


வாஷிங்டன்:ஆசியாவில் வளர்ந்துவரும் நாடுகளை குறிப்பாக ஈரானையும், சீனாவையும் குறிவைத்து அமெரிக்க பாதுகாப்புத்துறை புதிய உளவு நெட்வர்க்கை துவங்குகிறது. பாதுகாப்பு செயலாளர் லியோன் பனேட்டா இதற்கு அனுமதி வழங்கியுள்ளதாக நியூயார்க் டைம்ஸ் பத்திரிகை கூறுகிறது. புதிய உளவுப்பிரிவு சி.ஐ.ஏ மற்றும் இதர அமெரிக்க உளவுத்துறைகளுடன் ஒத்துழைத்து இயங்கும். சர்வதேச அளவில் நடவடிக்கைகளை பலப்படுத்தும் வகையில் புதிய ஏஜன்சியை உருவாக்கி இருப்பதாக பாதுகாப்பு
துறையில் மூத்த அதிகாரியை மேற்கோள்காட்டி நியூயார்க் டைம்ஸ் கூறுகிறது.
ஆஃப்கான் மற்றும் ஈராக்கில் இருந்து திரும்பியவர்கள் இந்த ஏஜன்சியில் செயல்படுவர். ராணுவ ரகசிய உளவுப் பிரிவிற்கு உதவுவதற்காக முன் அனுபவம் மிக்க லெஃப்டினண்ட் ஜெனரல் மைக்கேல் டி ஃப்ளினை ஒபாமா அரசு நியமித்துள்ளது.
thanks to asiananban

வஹாபிகள் – பரேலவிகள் : முஸ்லீம்களின் பிரிவினையை தூண்டி விட்டு குளிர் காயும் மத்திய அரசு !


ஒரே மதத்தை பின்பற்றுவர்களுக்கு மத்தியில் சிறு சிறு கருத்து வேறுபாடுகள் இருப்பது சகஜம் தான். ஆனால் அவற்றை ஒன்றுபடுத்த முடியவில்லையென்றாலும் குறைந்தபட்சம் அவற்றுக்கு மத்தியில் பிரிவினைக்கு தூபம் போடும் அபாயகரமான வேலையை ஒரு அரசு, அதுவும் மதசார்பற்ற அரசு செய்வது பிற்காலத்தில் எதிர்மறையான விளைவுகளை ஏற்படுத்தும் என்பதை பஞ்சாப் விஷயத்தில் அடிபட்டு உணர்ந்த பிறகும் காஷ்மீரில் அதை மத்திய அரசு தொடர்வது
விந்தையாக உள்ளது.

ஏற்கனவே பஞ்சாபில் ஆயுதம் தாங்கிய சீக்கியர்களை கட்டுபடுத்த இந்திரா காந்தி பிந்தரவாலேவை வளர்த்து விட்டு பின்பு வளர்த்த கடா மார்பில் பாய்ந்த கதையாக பிந்தரன்வாலேவை அடக்க ஆபரேஷன் புளூ ஸ்டார் நடத்தியதின் மூலம் கடைசியில் இந்திராகாந்தி சுட்டு கொல்லப்பட்டார் என்பது வரலாறு. தற்போதைய மத்திய அரசு இதே பாணி தந்திரத்தை காஷ்மீரில் தற்போது செய்து வருகின்றது.
காஷ்மீரில் உள்ள முஸ்லீம்களில் பெரும்பான்மையினர் பெரியவர்களின் கல்லறைகளுக்கு சென்று வழிபடும் பரேலவி குழுவை சேர்ந்தவர்கள். ஆனால் கடந்த 25 ஆண்டுகளில் அஹ்லே ஹதீத் குழுவை சார்ந்தவர்கள் எனப்படும் வகாபி பிரிவை சார்ந்தவர்கள் அதிகரித்து வருகின்றனர். அவர்கள் சமாதி வழிபாடு என்பது இஸ்லாத்தில் இல்லை என்றும் முஸ்லீம்கள் அவர்களின் வேதமாகிய குரான் மற்றும் முஹம்மது நபியின் போதனைகளை மட்டும் பின்பற்ற வேண்டும் என்று பிரசாரம் செய்பவர்கள்.
சவூதி போன்ற நாடுகளிலிருந்து வரும் பொருளாதாரம் மூலம் வகாபி பிரிவை சார்ந்தவர்கள் அவர்கள் சிந்தனை சார்ந்த புத்தகங்களை பரப்பி வருவதாகவும் பலரை சமாதி வழிபாட்டிலிருந்து தடுப்பதாகவும் குற்றம் சாட்டுகின்றனர். இச்சூழலில் வகாபிகள் தீவிரவாத செயல்களில் ஈடுபடுவதாகவும் பரேலவிகள் சாந்தமானவர்கள் என்று நினைக்கும் மத்திய அரசு வகாபிகளை கட்டுப்படுத்த பரேலவிகளை ஊக்குவிப்பதாக சொல்லப்படுகிறது.
இதே அரசியல் தந்திரத்தை தான் அன்றைய இந்திராகாந்தி அரசு பஞ்சாபில் கையாண்டது என்பது குறிப்பிடத்தக்கது. பொதுவாக பரேலவிகள் எவ்வித ஊர்வலம், பொதுகூட்டம் நடத்துபவர்கள் அல்ல என்றாலும் கடந்த ஆறு மாதங்களில் மத்திய அரசு, ராணுவம் மற்றும் காவல்துறையினர் உதவியுடன் பரேலவிகள் தினமும் தங்கள் செல்வாக்கை நிரூபிக்கும் விதமாக ஏதேனும் பொதுக்கூட்டம் நடத்துவது அதிகரித்து வருகிறது.
அது போல் சமீப காலமாக சமாதிகளை புணரமைத்து அழகுபடுத்தும் பணிகளும் ஜரூராக நடந்து வருகிறது. இவ்வாறு பரேலவிகளுக்கு மறைமுகமாக ஆதரவு கொடுக்கும் போக்கு ராணுவத்தினர் பலரை அதிருப்திக்கு ஆளாக்கி உள்ளது. பெயர் குறிப்பிட விரும்பாத ராணுவ அதிகாரி ஒருவர் “ அரசு ஒருவரை அவர் பின்பற்றும் வணக்க வழிமுறைகளை வைத்து மதிப்பிட முயல்வது அபாயகரமானது. குறிப்பாக தியோபந்த், ஜமாத்தே இஸ்லாமி, அஹ்லே ஹதீத் குழுவை சார்ந்தவர்கள் அபாயகரமானவர்கள், பரேலவிகள் நல்லவர்கள் என்று பிரிப்பது சரியல்ல. ஒரு மனிதர் பீஸ் டிவி பார்ப்பதை வைத்து அவரை தீவிரவாதி என்று அடையாளப்படுத்தும் அளவு அரசு சென்றிருப்பது அரை வேக்காட்டு தனம்” என்றார்.
பரேலவிகளுக்கு அரசு கொடுக்கும் ஆதரவுக்கு உதாரணமாக 2008ல் அஹ்லே ஹதீதின் இஸ்லாமிய பல்கலைகழகத்துக்கு அனுமதி கொடுத்த குலாம் நபி ஆஸாத் அதை அப்படியே கிடப்பில் போட்டு விட்டதும் தற்போது சூபிகள் ஆதரவில் நடத்தப்பட உள்ள ஷேக் உல் ஆலம் பல்கலைகழகம் ஆரம்பிக்கும் பணிகளுக்கு முழு ஒத்துழைப்பு கொடுப்பதும் குறிப்பிடத்தக்கது.
வகாபிகளை ஒடுக்க பரேலவிகளுக்கு ஆதரவு அளிக்கும் மத்திய அரசின் முடிவு குறித்து கருத்து தெரிவித்த ஹுரியத் தலைவர் ஒருவர் இச்செயல் இந்திய அரசுக்கு எவ்வித சாதகமான பலனையும் தராது என்றும் பிரிவினையை அதிகரிக்கும் இச்செயல் அபாயகரமானது என்றும் கூறினார். எல்லா கொள்கையிலும் நல்லவர்களும் தீயவர்களும் இருப்பது வாடிக்கை என்ற அவர் எல்லா வஹாபியும் தீவிர போக்குடையவர்கள் அல்ல, எல்லா பரேலவியும் சாந்தமானவர்களும் அல்ல என்ற அத்தலைவர் பாகிஸ்தானின் பஞ்சாப் கவர்னராக இருந்த சல்மான் தஸீரை கொன்றது அல்காயிதாவில் பயிற்சி பெற்ற தீவிரவாதி அல்ல என்றும் சமாதி வழிபாடு செய்யும் பரேலவி முஸ்லீம் தான் செய்தார் என்றும் கூறினார்.
நாட்டில் உள்ள எல்லா மத மக்களையும் ஒன்றுபடுத்தி நாட்டை வளப்படுத்த வேண்டிய அரசு ஒரு மதத்தில் உள்ள கருத்து வேறுபாடுகளை பயன்படுத்தி குளிர் காய நினைப்பது வல்லரசுக்கு அழகல்ல என்பதோடு அது ஆபத்தான பக்கவிளைவுகளை ஏற்படுத்தும் என்பதும் வரலாறு உணர்த்தும் பாடம். பாடம் படிக்குமா அரசு என்பதற்கு காலம் தான் பதில் சொல்ல வேண்டும்.
 thanks to asiananban

ஹைதராபாத் கலவரம்:அரசியல் ஆதாயம் தேட ஹிந்துத்துவா சக்திகளின் சதித்திட்டம் – உண்மை கண்டறியும் குழு!

புதுடெல்லி:ஹைதராபாத் பழைய நகரத்தில் நடந்த வகுப்பு கலவரம் இரு சமூகங்கள் இடையே வகுப்பு பிரிவினையை உருவாக்கி ஆதாயம் தேட முயன்ற ஹிந்துத்துவா சக்திகளின் சதித்திட்டம் என்று உண்மைக் கண்டறியும் குழுவின் அறிக்கை கூறுகிறது.
Anti-Muslim riots 
வகுப்புக் கலவரத்தின் மூலம் 2014-ஆம் ஆண்டு நடைபெறவிருக்கும் ஆந்திரபிரதேச மாநில சட்டப்பேரவை தேர்தலிலும் மக்களவை பொதுத் தேர்தலிலும் ஆதாயம் தேடுவதே ஹிந்துத்துவா சக்திகளின் நோக்கம் என்றும், கலவரத்திற்கான சதித்திட்டத்தில் அரசியல் கட்சிகளுக்கும் பங்குண்டு என்று அறிக்கை கூறுகிறது.


ஹெச்.ஆர்.எஃப், ஐ.சி.எ.என், என்.எ.பி.எம், எ.ஐ.சி.யு.டி ஆகிய சிவில் உரிமை அமைப்புகளும், வழக்கறிஞர்களும் அடங்கிய உண்மைக் கண்டறியும் குழு ஹைதராபாத் கலவரத்தை குறித்து விசாரணை நடத்தியது. இக்குழுவின் அறிக்கையில் கூறப்பட்டுள்ள முக்கிய விபரங்கள்:

ஆந்திராவில் நடந்து வந்த தெலுங்கானா போராட்டமும், உயர் அதிகாரிகளும், அரசியல் கட்சிகளுக்கும் பங்குண்டு என்று கூறப்படும் பெரும் ஊழல்கள் வெளியானதும், ஆளுங்கட்சியில் உட்கட்சிப் போரை மூடி மறைத்து மக்களின் கவனத்தை திசை திருப்பவும் இத்தகைய வகுப்புவாத வன்முறைகள் திட்டமிட்டு நடத்தப்பட்டுள்ளதாக சந்தேகம் எழுகிறது.
ஹைதராபாத்தில் முன்னர் நடந்த கலவரங்களின் பின்னணியிலும் இத்தகைய சதித்திட்டங்கள் இருந்தது நிரூபணமாகியுள்ளது.
கடந்த சில வருடங்களாக தெலுங்கானா, ராயலசீமா பகுதிகளில் முஸ்லிம்-ஹிந்து சமுதாயங்களுக்கு இடையே வகுப்புவாத மோதலை உருவாக்குவதற்கான முயற்சிகள் நடந்துவருகின்றன.
மதனபேட், ஸைதாபாத் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் இத்தகைய முயற்சிகள் கடந்த ஆண்டு தோல்வியை தழுவியது. இதற்கு பிறகு விசுவஹிந்து பரிஷத், ஹிந்து வாஹினி ஆகிய அமைப்புகள் கொந்தளிப்பை ஏற்படுத்தும் விதத்தில் முஸ்லிம் இளைஞர்கள் மீது தொடர்ந்து தாக்குதல்களை கட்டவிழ்த்து விட்டதாக போலீஸ் விசாரணையில் கண்டுபிடிக்கப்பட்டது.
இரவு நேரங்களில் முஸ்லிம்களின் வாகனங்கள் சேதப்படுத்தப்பட்டன. இதன் மூலம் முஸ்லிம்களின் உணர்வுகளை தூண்ட முயற்சிகள் நடந்தன.
இதன் தொடர்ச்சிதான் இம்மாதம் 8-ஆம் தேதி நடந்த வன்முறையும், கோயில் வளாகத்தில் பசு மாமிசத்தை வீசிவிட்டு முஸ்லிம்கள் மீது பழி சுமத்தி அவர்கள் மீது வன்முறையை கட்டவிழ்த்துவிட்ட சம்பவமும் நிகழ்ந்தன. இந்த வன்முறையில் முஸ்லிம்களின் வழிப்பாட்டுத் தலங்கள் மீதும், முஸ்லிம் வீடுகள் மீதும் தாக்குதல் நடந்தன. வழக்கம் போலவே போலீசார் வன்முறையின் பேரில் 14 முஸ்லிம் இளைஞர்களை கைது செய்தனர்.
அதேவேளையில் 28 ஹிந்து இளைஞர்கள் மீது வழக்கு பதிவுச் செய்யப்பட்ட போதிலும் அவர்கள் தலைமறைவாக உள்ளனர் என்று போலீஸ் கூறுகிறது. இவர்களை தேடி கண்டுபிடிப்பதற்கு பதிலாக கைது செய்யப்பட்ட முஸ்லிம் இளைஞர்கள் மீதான வழக்கு நடவடிக்கைகளை துரிதப்படுத்த போலீஸ் முனைப்புடன் செயல்படுகிறது. இது முதல் நோக்கிலேயே(prima facie) தெரியவருகிறது. போலீசின் இத்தகைய பாரபட்சமான போக்கு முஸ்லிம் சமுதாயத்திற்கு மத்தியில் பீதியை ஏற்படுத்தியுள்ளது. போலீஸ் மீதான பாரபட்சமற்ற நம்பிக்கையை மீட்டெடுக்க நடவடிக்கை எடுக்கவேண்டும். ஆர்.எஸ்.எஸ், விசுவ ஹிந்து பரிஷத், பஜ்ரங் தள் மற்றும் ஹிந்து வாஹினியின் நடவடிக்கைகளை தொடர்ந்து கண்காணிக்க வேண்டும். மேலும் இவர்கள் மூலம் வகுப்புவாத பிரச்சனைகள் உருவாவதை தடுத்து நிறுத்தவேண்டும்.
வகுப்புவாத கலவரத் தடுப்புச் சட்டத்தை உடனடியாக பாராளுமன்றத்தில் நிறைவேற்ற வேண்டும். வெறுப்புணர்வை பரப்பும் வகுப்புவாத தலைவர்கள் மீது நடவடிக்கை மேற்கொள்ளவேண்டும்.
அதேவேளையில் கலவரத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் இரு சமுதாயத்தினரும் நல்லிணக்கமான உறவை தொடர்கின்றனர். கொந்தளிப்பான பகுதிகளில் முதிர்ந்தவர்கள் விரும்பத்தகாத நிகழ்வுகளை கட்டுப்படுத்துவதில் சிறப்பாக செயல்படுகின்றனர். இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

சமூக நல்லிணக்கத்தை சீர்குலைக்கும் ஏ.பி.வி.பி - கேம்பஸ் ஃப்ரண்ட் குற்றச்சாட்டு

சங்கப்பரிவார கும்பல்களின் மாணவர் பிரிவான "அகில பாரதிய வித்யார்த் பரிஷத்" ஹைதராபாத் உஸ்மானிய பல்கலைகழகத்தில் சமூக நல்லிணக்கத்தை சீர்குலைப்பதாக கேம்பஸ் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் ஆந்திர‌ மாநில தலைவர் டாக்டர் செய்யது பரகத்துல்லாஹ் குற்றஞ்சாட்டியுள்ளார். சங்கப்பரிவார்களின் தீர்மானங்களை ஏ.பி.வி.பி செயல்படுத்தி வருவதாகவும், தலித் மற்றும் சிறுபான்மை மக்கள் மத்தியில் நிலவி வரும் நல்லிணக்கத்தை சீர்குலைக்க முயற்ச்சித்து வருவதாகவும் கூறியுள்ளார்.

ஹைதராபாத் உஸ்மானியா பல்கலைகழகத்தில் "பீஃப் ஃபெஸ்டிவல்" (மாட்டிறைச்சி உண்ணும்) நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் ஜாதி, மத பாகுபாடின்றி பெரும்பாலான மாணவர்கள் இதில் கலந்து கொண்டு மாட்டிறைச்சி சாப்பிட்டுள்ளனர். இந்நிகழ்ச்சிக்கு மதச்சாயம் பூசி முஸ்லிம்கள் மீது குற்றம் சுமத்த முயன்று, தேவையில்லாத குழப்பங்களை ஏற்படுத்தி பதட்டமான சூழ்நிலையை ஏற்படுத்தியிருக்கின்றனர். இவ்வாறு செய்யது பரகத்துல்லாஹ் தெரிவித்தார்.

கேம்பஸ் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் மாநில நிர்வாகிகள் கூட்டம் மாநில தலைமையகத்தில் வைத்து நடைபெற்றது. இதில் வருகின்ற ஏப்ரல் 30ஆம் தேதியை "குழந்தை தொழிலாளர்கள் எதிர்ப்பு தினம்" என கடைபிடிக்கப்பட்டு விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் மாநிலம் முழுவதும் தெருமுனைக்கூட்டங்கள் மற்றும் இன்னபிற நிகழ்ச்சிகள் நடத்த தீர்மானிக்கப்பட்டது.

மேலும் சமூக மாற்றத்திற்காக உருவாக்கப்பட்டுள்ள கேம்பஸ் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா இனி வரும் காலங்களில் சமூக நல்லணிகத்தை பரப்பவும் அனைத்து கல்லூரி மற்றும் பல்கலைகழகங்களில் தனது உறுப்பினர்களை அதிகரிக்கும் பணியை மேற்கொள்ளும் என  பொதுச்செயலாளர் ஹஸன் ஷேக் தெரிவித்தார்.

விடியல் வெள்ளியின் சந்தாதாரர் ஆவீர்!


உலகளவிலும், தேசிய அளவிலும் முஸ்லிம்களின் அவலை நிலையை சமூக மக்களிடம் கொண்டு சேர்க்கும் பணியை "விடியல் வெள்ளி" மாத இதழ் பல ஆண்டுகளாக சிறப்பாக செய்து வருவது தாங்கள் அறிந்த ஒன்றே. சிறிய வடிவிலான ஏடாக தொடங்கப்பட்ட இந்த இதழ் இறைவனின் கிருபையால் தற்போது மாதந்தோரும் 25,000ற்கும் மேற்பட்ட எண்ணிக்கையில் அச்சிடப்பட்டு வருகிறது.


தமிழக முஸ்லிம்களின் வரலாற்றில் ஃபாசிஸ சங்கப்பரிவாரங்களின் அட்டூழியங்களை முதன் முதலில் சமூகத்திற்கு எடுத்துறைத்த பெருமை விடியல் வெள்ளியையே சாரும். தமிழகத்தில் பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா என்ற இயக்கம் பெயர் இல்லாமல் செயல்பட்ட அன்றைய காலத்தில் மக்கள் இப்பத்திரிக்கையின் பெயரைக் கொண்டே அழைத்து வந்தனர். ஏன் இன்றும் கூட பாப்புலர் ஃப்ரண்டின் உறுப்பினர்களை "விடியல் குரூப்" என்றே சில இடங்களில் அழைத்து வருவதை காண முடிகிறது.

சமூக மாற்றத்திற்காக விடியல் வெள்ளி ஆற்றிவரும் பங்கு சிறப்பானதாகும். அப்பேற்பட்ட மாத இதழான "விடியல் வெள்ளி" பத்திரிக்கைக்காக ஓராண்டு சந்தா சேர்ப்பு இயக்கம் ஏப்ரல் 25 முதல் மே 10 வரை செயல்பட தொடங்கியுள்ளது.  கடுமையான விலை ஏற்றத்தின் காரணமாக சென்ற ஆண்டைக்காட்டிலும் இந்த ஆண்டு சந்தாவின் விலையை அதிகரிக்க நிர்பந்தம் ஏற்பட்டுள்ளது என்பதை வருத்தத்தோடு தெரிவித்துக்கொள்கிறோம். இந்த ஆண்டு சந்தாவின் விலை ரூபாய் 240/-ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

எனவே விடியல் குடும்பத்தில் நீங்களும் சந்தாதாரர் ஆவீர் என உங்களை அன்போடு கேட்டுக்கொள்கிறோம். உங்களை நாடி வரும் எங்களுடைய சகோதரர்களிடம் சந்தாவை செலுத்து ரசீது பெற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறோம்.

ADIRAI PFI.CONTACT -9003441009

புதுடெல்லியில் இஸ்ரேலை கண்டித்து எழுச்சியுடன் நடைபெற்ற பேரணி

புதுடெல்லி: உலக பயங்கரவாத நாடான இஸ்ரேலுடன் எவ்வித உறவையும் ஏற்படுத்தக்கூடாது என்றும், இதுவரை அந்நாட்டோடு இருக்கின்ற எல்லா உறவுகளையும் ரத்து செய்ய வேண்டும் என்பதை வலியுறுத்தி முஸ்லிம் சமுதாயத்தின் இயக்கங்கள் பல ஒன்றினைந்து இன்று காலை 10 மணியளவில் பாராளுமன்றம் நோக்கி மாபெரும் பேரணியை நடத்தியது. பெண்கள் உட்பட ஏராளமானோர் இதில் கலந்து கொண்டனர். விரிவான செய்திகள் பின்னர் வெளியிடப்படும் இன்ஷா அல்லாஹ்!

பேரணிக்காட்சிகள்