Monday, October 31, 2011

சென்னை தி.நகரில் சரவணா ஸ்டோர்ஸ் உள்ளிட்ட 61 கட்டடங்களுக்கு சீல்

சென்னை, அக்.31: சென்னை, தி.நகர் பகுதியில் விதிமுறைகளை மீறி கட்டப்பட்ட கட்டடங்களுக்கு சீல் வைக்கப்பட்டது.

சென்னை தியாகராய நகர் பகுதியில் விதிமுறைகளை மீறி கட்டப்பட்ட கட்டங்களை இடிப்பது தொடர்பாக உயர்நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. இது தொடர்பாக ஒரு மாதம் முன்னரே அறிவிப்பும் கொடுத்திருந்தது. எந்த நடவடிக்கையும் இல்லாத சூழ்நிலையில், கடந்த வாரம், சென்னை உயர்நீதிமன்றம் இதற்காக சென்னை பெருநகர வளர்ச்சிக் குழுமத்தை கண்டித்தது.


இந்நிலையில், இன்று காலை 5 மணி முதல் தி.நகர் பகுதியில் போலீஸார் பாதுகாப்புக்காக குவிக்கப்பட்டனர். சென்னை பெருநகர வளர்ச்சிக் குழும அதிகாரிகள், மாநகராட்சி அதிகாரிகள் முன்னிலையில், சரவணா ஸ்டோர்ஸ், சென்னை சில்க்ஸ், குமரன் தங்க மாளிகை, ரத்னா ஸ்டோர்ஸின் 3 கடைகள், காதிம்ஸ், ஜெயச்சந்திரன் உள்ளிட்ட 61 கட்டடங்களுக்கு சீல் வைக்கும் பணியை அவர்கள் மேற்கொண்டனர்.

சில கட்டடங்கள் வர்த்தகக் கட்டடங்கள் என்பதால், இரவு தூங்கிக் கொண்டிருந்த பணியாளர்கள் உள்ளிருப்பில் ஈடுபடுவதாக தகவல்கள் வெளியாகின. ஆனால், அதிகாரிகள் அவர்களை வெளியேற்றிய பிறகு சீல் வைக்கும் பணியை மேற்கொண்டனார்.

குவைத்:சமுக ஒற்றுமை பொதுக்கூட்டம்.



  கடந்த 28-10-2011 வெள்ளியன்று குவைத் இந்தியா ஃப்ரட்டர்நிட்டி ஃபாரம் (KIFF) சிறப்பாக ஏற்பாடு செய்திருந்த சமுக ஒற்றுமை பொதுக்கூட்டம் சகோதரர் அம்ஜத் அலி தலைமையில் ரவ்தா ஜம்மியத்துல் இஸ்லாஹி அல் இஜ்திமாஈ ஹாலில் நடைபெற்றது. இரவு 7 மணிக்கு துவங்கிய இவ்விழாவில் சகோதரர் கலீல் பாக்கவி அவர்கள் கிராத் ஓதி துவங்கி வைத்தார். அடுத்ததாக KIFF-ன்தமிழ் பிரிவு தலைவர் சகோதரர் அம்ஜத் தலைமையுரை நிகழ்த்தினார். அதன் பிறகு சகோதரர் அப்துல் அஜீஸ் அவர்கள் சிறப்புரை நிகழ்த்தினார். 

Sunday, October 30, 2011

அத்வானி செல்லும் பாதையில் வெடிகுண்டு : சம்பவம் ‌தொடர்பாக ஒருவர் கைது!

    

அத்வானி தமிழ் நாட்டிற்குள் வருவதை காவிகளின் பிரச்சார பீரங்கிகளான ஊடகங்கள் கடமையே என்று செய்தியை வெளியிடாமல் தேசபக்தியை குத்தகை எடுத்தவர்கள் போல் காவிகளுக்கு படு பயங்கரமான விளம்பரங்களை கொடுத்தும் தமிழ் நாட்டில் எவரும் அத்வானியை ஏறெடுத்தும் பார்க்கவில்லை.

வெடி சப்தம் போட்டால்தான் மக்கள் திரும்பியாவது பார்ப்பார்கள் என்று காவிகளின் கலாச்சார வெடிகுண்டே அங்கு வெடித்திருக்க கூடும் என்று ஊடக விழிப்புணர்வுள்ள மக்கள் எண்ணுகிறார்கள்.

வழக்கமாக முஸ்லிம்களை போகஸ் செய்யும் ஊடகங்கள் இப்போது நக்சலைட்டுகளை பயன்படுத்தி உள்ளது. அத்வானி செல்லுமிடங்களில் பூகம்பமே வந்தாலும் தமிழ்நாட்டு மக்கள் திரும்பி பார்க்க மாட்டார்கள்.