Saturday, June 4, 2011

இனி பயமில்லாமல் விமானத்தில் பயணம் செய்யலாம் !!!

புதுடில்லி:  ஜூன் 04,  விமான விபத்துக்கள் ஏற்படும் காரணிகளை முன் கூட்டியே அறிந்து கொள்ள கூடிய  சாப்ட்வேர் ஒன்று கண்டு பிடிக்கப்பட்டுள்ளது.

அதன் மூலம் விமானங்கள் ஆபத்தில் சிக்கிகொள்வதை தவிர்க்கலாம் என்று தெரிகிறது. இது வருங்கால விமான சேவையில் ஒரு சிறப்பான இடத்தை பிடிக்கும் என்று நம்பப்படுகிறது.


இந்திய விமானப்படை பிரிவைச் சேர்ந்த குழுவினர் இதற்கான சாப்ட்வேரை தயாரித்துள்ளனர். ஏர்மார்ஷல் ஏ.எஸ்.கார்னிக் ( ஆய்வு மற்றும் பாதுகாப்பு ) தலைமையிலான குழுவினர் இத்தகைய கண்டுபிடிப்பை நிகழ்த்தியுள்ளனர்.
 
கடந்த 30 ஆண்டுகாலம் நடைபெற்றுள்ள நிகழ்ச்சிகளை அடிப்படையாக கொண்டு கணித்தின் மூலம் இந்த கண்டுபிடிப்பை நிகழ்த்தியுள்ளனர். இந்த சாப்ட் வேரை வெளியிட்டு பேசிய இந்திய விமானப்படையினர் இதன்மூலம் விமான விபத்துக்கள் குறைவதற்கான வாய்ப்புக்கள் உண்டாகும் என நம்பிக்கை தெரிவித்தனர்

0 comments:

Post a Comment