Sunday, June 12, 2011

கோப்பையை கைபற்றியது அதிரை AFFA அணி


இன்று மேலனத்தத்தில் நடைபெற்ற இறுதிப் போட்டியில் AFFA அணி பிச்சினிக்காடு அணியை சந்தித்தது நேற்று நடைபெற்ற ஆட்டத்தில் வெற்றி பெற்றதை கேள்விப்பட்ட நமதூர் வாசிகள் சுமார் 150 பேர் மேலனத்தத்தில் குவிந்தனர். ஆட்டம் ஆரம்பித்த சில நிமிடங்களில் அதிரை அணியின் அஷ்ரப் முதல் கோலை அடித்தார் அடுத்த சில நிமிடங்களில் பிச்சினிக்காடு அணியினர் தங்கள் சார்பாக ஒரு கோலை அடித்தனர் ஆட்டம் சமநிலையை அடைந்தது பின்னர் ஹைதர் தனக்கு கிடைத்த கிக் வாய்பை லாவகரமாக பயன்படுத்தி கோல் அடித்தார் முதல் பகுதி நேர ஆட்ட முடிவில் 2-1 என்ற கோல் கணக்கில் AFFA முன்னிலை பெற்றது . இடைவேளைக்கு பிறகு தொடர்ந்து ஆடிய AFFA அணியின் வீரர் சைபுதீன் கோல் அடித்தார் . பிச்சினிக்காடு அணியில் மிகச் சிறந்த தஞ்சை அணி வீரர்கள் பங்கு பெற்றும் அவர்கலால் ஒரு கோல் மட்டுமே போட முடிந்தது இறுதியில் 3-1 என்ற கோல் கணக்கில் AFFA அணி வெற்றிவாகை சூடியது .AFFA அணிக்கு இந்த ஆண்டின் இது முதல்வெற்றி கோப்பை ஆகும்.



வெற்றி வாகை சூடிய விரர்கள்
சிறப்பு விருந்தினர்கள் ஆட்டத்தை துவைகிவைக்கும் காட்சி




0 comments:

Post a Comment