Saturday, December 31, 2011

சிரியா: பொதுமக்கள் ஊர்வலத்தில் சரமாரியாக சுட்ட ராணுவம். 50 பேர் பலி


சிரியாவில் பஷார் அல்-ஆசாத் ஆட்சிக்கு எதிராக மக்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர். தற்போது இது கலவரமாக மாறியுள்ளது. இதில் இதுவரை சுமார் 3 ஆயிரம் பேர் உயிரிழந்தனர்.
 
இந்த நிலையில் நேற்று தலைநகர் டமாஸ்கஸ் அருகே சதுக்கத்தில் சுமார் 30 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் திரண்டு போராட்டம் நடத்தினார்கள்.   அப்போது போராட்டத்தில ஈடுபட்ட மக்கள் மீது ராணுவம் சரமாரியாக துப்பாக்கியால் சுட்டது. டாங்கிகள் மூலம் தாக்குதல் நடத்தப்பட்டது. இச்சம்பவத்தில் சுமார் 50 பேர் கொல்லப்பட்டனர். 100-க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்தனர்.
 
இதற்கிடையே சிரியாவில் நடைபெறும் போராட்டத்தை முடிவுக்கு கொண்டு வரும் நடவடிக்கையில் அரபு நாடுகளின் பிரதிநிதிகள் அடங்கிய கண்காணிப்பு குழு அமைக்கப்பட்டுள்ளது.
 
சூடான் ராணுவ உளவுத்துறை அதிகாரி ஜெனரல் முகமது அகமது முஸ்தபா அல்-தபாய் இக்குழுவுக்கு தலைவராக உள்ளார். அவர் டமாஸ்கஸ், ஹோம்ஸ், பாபாஅம்ரோ, இட்லிப் உள்ளிட்ட இடங்களில் கண்காணிப்பு நடவடிக்கையில் ஈடுபட்டார்.
as
thanks to thedipaar.com

கிரிமினல்கள் தேர்தலில் போட்டியிடத் தடை விதிக்கும் மசோதா தாக்கல். குரேஷி


கிரிமினல்கள் தேர்தலில் போட்டியிடத் தடை விதிக்கும் மசோதா வரும் பட்ஜெட் கூட்டத் தொடரில் தாக்கல் செய்யப்படக் கூடும் என்று தலைமைத் தேர்தல் ஆணையர் எஸ்.ஒய். குரேஷி தெரிவித்தார்.

பி.டி.ஐ. செய்தி நிறுவனத்துக்கு அவர் அளித்த பேட்டியில், குளிர்காலக் கூட்டத் தொடரிலேயே தேர்தல் சீர்திருத்தம் தொடர்பான மசோதாக்கள் தாக்கல் செய்யப்படாதது வருத்தமளிக்கிறது என்றும் குறிப்பிட்டார்.

மத்திய அரசு முக்கிய திருத்தம்: கொலை, கொள்ளை, ஆள்கடத்தல், பாலியல் பலாத்காரம் உள்ளிட்ட கொடிய குற்றங்களில் தொடர்புடைய நபர்கள் தேர்தலில் போட்டியிடக் கூடாது என்பதில் தேர்தல் ஆணையம் உறுதியாக உள்ளது. இத்தகைய குற்றங்கள் தொடர்பாக தேர்தலுக்கு 6 மாதங்களுக்கு முன்னர் ஒருவர் மீது முதல் தகவல் அறிக்கை (எப்.ஐ.ஆர்.) பதிவு செய்யப்பட்டிருந்தால் அவர் தேர்தலில் போட்டியிட அனுமதிக்கக் கூடாது என்று தேர்தல் ஆணையம் சார்பில் பரிந்துரைத்திருந்தோம்.

இதில் மத்திய அரசு சில திருத்தங்களை மேற்கொண்டுள்ளது. மேற்குறிப்பிட்ட கொடிய குற்றங்களில் தேர்தலுக்கு ஓராண்டுக்கு முன்னர் ஒருவர் மீது குற்றப் பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டிருந்தால் அவருக்குத் தடை விதிக்கலாம் என்று மத்திய அரசு தெரிவித்தது. அந்த யோசனையை ஏற்றுக் கொண்டுள்ளோம். இது தொடர்பான மசோதா வரும் பட்ஜெட் கூட்டத் தொடரில் தாக்கல் செய்யப்படும் என்று எதிர்பார்க்கிறோம்.

பதவிப் பறிப்பு: கிரிமினல்களுக்கு தடை விதிக்கும் விவகாரத்தில் அரசியல் கட்சிகளிடையே கருத்தொற்றுமையை உருவாக்குவது கடினம் என்று மத்திய அரசு கருதுகிறது. ஏனெனில் ஒவ்வொரு கட்சியிலும் குறிப்பிட்ட எண்ணிக்கையில் கிரிமினல் பின்னணி உடைய எம்.பி., எம்.எல்.ஏ.க்கள் உள்ளனர்.

இப்போதைய சட்டவிதிகளின்படி பதவியில் இருக்கும் எம்.பி., எம்.எல்.ஏ.க்கள் நீதிமன்றத்தால் குற்றவாளிகளாக அறிவிக்கப்படும்போது அடுத்து வரும் தேர்தல்களில் போட்டியிட மட்டுமே அவர்களுக்குத் தடை விதிக்கப்படுகிறது. அவர்களது பதவிக்கு எந்த ஆபத்தும் இல்லை. புதிய சட்டத் திருத்த மசோதாவின்படி அவர்கள் குற்றவாளிகளாக அறிவிக்கப்பட்டால் அவர்களது பதவியும் உடனடியாகப் பறிக்கப்படும்.

அரசியல் காழ்ப்புணர்வு காரணமாக சிலர் மீது பொய் வழக்குகள் பதிவு செய்யப்படுவதும் நடைபெறுகிறது. இதுபோன்ற சம்பவங்களில் எச்சரிக்கையுடன் செயல்பட வேண்டியுள்ளது.

லோக்பால் மசோதாவால் தாமதம்: தேர்தல் ஆணையம் பரிந்துரைத்துள்ள சீர்திருத்தங்களை அமல்படுத்துமாறு கடந்த 20 ஆண்டுகளுக்கும் மேலாக மத்திய அரசை வலியுறுத்தி வருகிறோம். இது தொடர்பான மசோதாக்கள் குளிர்காலக் கூட்டத் தொடரில் தாக்கல் செய்யப்படும் மத்திய சட்ட அமைச்சர் சல்மான் குர்ஷித் உறுதியளித்திருந்தார்.

as
thanks to yarlmuslim

சவுதிஅரேபியாவுக்கு ஈரான் அச்சுறுத்தலாம் - அமெரிக்கா போர் விமானங்கள் வழங்குகிறது


சவுதிஅரேபியாவுக்கு அமெரிக்கா போர் விமானங்களை விற்கிறது.   சவுதிஅரேபியாவுக்கு அதன் அண்டை நாடான ஈரான் அச்சுறுத்தலாக உள்ளது. எனவே அது தனது ராணுவ பலத்தை பெருக்கி வருகிறது. அதற்காக தனது நட்பு நாடான அமெரிக்காவிடம் இருந்து ஆயுதங்களை வாங்கி குவிக்கிறது. 

இந்த நிலையில் போர் விமானங்களை வாங்குவது குறித்து கடந்த ஆண்டு அமெரிக்காவுடன் ஒப்பந்தம் செய்து இருந்தது. அதன்படி சவுதி அரேபியாவுக்கு 84 போயிங் எப்-15 ரக போர் விமானங்களும், மற்றும் 70 அதிநவீன போர் விமானங்களையும் அமெரிக்கா வழங்குகிறது. மேலும் ஹெலி காப்டர்கள், ஏவுகணைகள், வெடி குண்டுகளும் வழங்கப்பட உள்ளன. அவற்றின் விலை ரூ.1 லட்சத்து 50 ஆயிரம் கோடி.

இதற்கான அதிகாரப் பூர்வ தகவல் ஹவாயில் இருந்து நேற்று வெளியிடப்பட்டது. தற்போது அங்குதான் அதிபர் ஒபாமா விடுமுறையை கழித்து வருகிறார். 
thanks to yarlmuslim

ஆளில்லா ஹெலிகாப்டரை அமெரிக்கா தயாரித்தது


அமெரிக்கா ‘டிரோன்’ என்றழைக்கப்படும் ஆளில்லா தானியங்கி விமானங்களை தயாரித்துள்ளது. அந்த விமானங்கள் மூலம் மறைவிடங்களில் பதுங்கி ஏவுகணை வீசி அழிக்கப்பட்டு வருகிறார்கள்.

இந்த நடவடிக்கை பாகிஸ்தானில் மேற்கொள்ளப்பட்டது. கடந்த மாதம் ஆப்கானிஸ்தான் எல்லையில் பாகிஸ்தான் ராணுவம் முகாம் மீது தாக்குதல் நடத்தியதில் 24 வீரர்கள் உயிரிழந்தனர்.  அதைத்தொடர்ந்து ஏற்பட்ட கருத்து வேறு பாட்டினால் அங்கிருந்து அமெரிக்க ராணுவம் வெளியேற்றப்பட்டது.   

அதைத்தொடர்ந்து தற்போது அமெரிக்கா ஆளில்லாமல் பறக்கும் அதிநவீன ஹெலிகாப்டர்களையும் தயாரித்துள்ளது. அதில் சக்தி வாய்ந்த கலர் வீடியோ காமிராக்களும் இடம் பெற்றுள்ளன. இவற்றை இயக்க ஒருதளம் தேவையில்லை. இதன் சோதனை ஓட்டம் வருகிற ஜூன் மாதம் நடக்கிறது. 

அமெரிக்கா 3 ஆளில்லா ஹெலிகாப்டர்களை ஆப்கானிஸ்தானில் இருந்து இயக்கவுள்ளது.
thanks to yarlmuslim

அஹமதாபாத் குண்டுவெடிப்பில் முஸ்லிம் இளைஞர் கைது.


புதுடெல்லி: கடந்த 2008ஆம் ஆண்டு அஹமதாபாத்தில் நடைபெற்ற குண்டுவெடிப்பில் ஈடுபட்டதாகக் கூறி மெளலானா ஹபீஃப் ஃபலாஹி என்ற 26 வயது முஸ்லிம் இளைஞர் குஜராத் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளார். கடந்த புதன்கிழமை அன்று லக்னோ நீதிமன்றத்தில் ஆஜர்படுத்திவிட்டு சிறையில் அடைத்துள்ளனர்.





வட இந்தியாவை பொருத்தவரை எந்த குண்டுவெடிப்பு வழக்காக இருந்தாலும் ஆஜம்கர் நகரிலிருந்தே பெரும்பாலான அப்பாவி முஸ்லிம் இளைஞர்கள் கைது செய்யப்பட்டு வருகின்றனர். அவ்வாறே ஆஜம்கர் நகரைச் சேர்ந்த ஹபீப் கைது செய்யப்பட்டுள்ளார். இவரது பெயர் குற்றப்பத்திரிக்கையில் இருப்பதாக குஜராத் காவல்துறையினர் கூறி கைது செய்துள்ளனர். குஜராத் திவீரவாத எதிர்ப்பு படையினரும் ஹபீபை தேடப்படும் குற்றவாளிகளாக அறிவித்திருந்தனர்.



டிசம்பர் 27ஆம் தேதி அன்று ஆஜம்கர் நகர காவல்துறையினரின் உதவியோடு குஜராத் காவல்துறையினர் ஹபீபை கைது செய்துள்ளனர். ஆஜம்கர் அருகில் உள்ள அம்பேத்கர் நகரில் உள்ள ஒரு மதரஸாவில் ஆசிரியராக பணி புரிந்து வந்திருக்கிறார் ஹபீப், அங்கு வைத்து தான் காவல்துறையினர் அவரை கைது செய்துள்ளனர். 



குற்றப்பத்திரிக்கையில் ஹபீப் குண்டுவெடிப்பில் தொடர்புடையவர் என்று கேரளாவில் திவீரவாத செயல்களை நிகழ்த்துவதற்கு பயிற்ச்சி பெற்றார் என்றும் குறிப்பிட்டுள்ளனர். ஆனால் ஹபீப் மீது இதுவரை ஆஜம்கரிலோ அல்லது அம்பேத்கர் நகரிலோ அவர் மீது எவ்வித வழக்கும் பதிவு செய்யப்படவில்லை. 




உத்திர பிரதேச தீவிரவாத எதிர்ப்புப் படை காவல்துறையினர் கூறும்போது சிமி இயக்கத்தோடு தொடர்புடையவர் என்று சந்தேகத்தின் பெயரில் ஆஜம்கர் நகரிலிருந்து ஒருவர் கைது செய்யப்பட்ட பின்னர் காவல்துறையினரின் விசாரணையிலிருந்து தப்பிப்பதற்காக ஆஜம்கரில் புதிதாக கடை ஒன்றை திறந்தார். காவல்துறையினரின் தேடுதல் வேட்டை அதிகரித்தவுடன் ஹபீப் ஆஜம்கரிலிருந்து அம்பேத்கர் நகருக்கு சென்றுவிட்டதாக கூறுகின்ற்னர்.



ஹபீபின் சகோதரன் ரஷீத் மற்றும் அவரது உறவினர் முஹம்மது கைஸ் காவல்துறையினர் கூறும் இந்த குற்றச்சாட்டை வன்மையாக மறுத்துள்ளனர். ஹபீப் மிது பொய்யாகவே காவல்துறையினர் வழக்கு பதிவு செய்ததாக கூறுகின்றனர். 



மஷிஹுதீன் சஞ்சாரி என்னும் சமூக ஆர்வளர் கூறும் போது தீவிரவாத எதிர்ப்பு செயல் என்ற பெயரில் மனித உரிமை மீறல்கள் அதிகரித்து வருகின்றனர். ஹபீப் கைது செய்யப்பட்ட பின்பு அவரது குடும்பத்திற்கு அவர் தொடர்பான எந்த தகவலும் தெரிவிக்கப்படவில்லை. தற்போது ஆஜம்கர் நகரில் ஹபீபின் கைது மூலமாக தேவையில்லாத பதட்டத்தை காவல்துறையினர் ஏற்படுத்திவிட்டதாக குற்றம் சுமத்தியுள்ளார். 



சஞ்சாரி கூறும்போது இதுவரை ஆஜம்கர் நகரிலிருந்து கைது செய்யப்பட்ட இளைஞர்களுக்கு எதிராக எந்த ஒரு ஆதாரப்பூர்வ நிரூபிக்கப்பட்ட வழக்குகள் இல்லை. ஒவ்வொரு துக்க நிகழ்வுகள் நடைபெறும் போது நாளடைவில் மக்கள் அதை மறந்துவிட்டு தத்தமது வேலைகளில் ஈடுபடத்தொடங்குவார்கள். ஆனால் ஆஜம்கர் நகர மக்கள் மட்டும் நித்தம் நித்தம் பீதிக்குள்ளாக்கப்பட்ட நிலையிலேயே வாழ்ந்து வருவதாக சஞ்சாரி கூறினார்.
நன்றி சென்னை பாப்புலர் பிரன்ட் 

Friday, December 30, 2011

இரண்டாம் உலகப்போர் - ஹிரோஷிமா



THE AFTER PICTURES ARE VISUALLY
EXTRAORDINARY HIROSHIMA 64 YRS LATER...
Hiroshima, Nagasaki 1945 
இரண்டாம் உலகப்போர் அல்லது உலகப்போர் 2 (World War II, அல்லது Second World War) என அறியப்படுகிறது இருபதாம் நூற்றாண்டின் நடுப்பகுதியில் காணப்பட்ட இரண்டு வெவ்வேறுபட்ட அரசியல்,போரியல்முரண்பாடுகளின் சேர்கைக் காரணமாக உலகின் பெரும்பாலான பகுதிகளில் நடைபெற்ற பெரும் போரைக் குறிக்கும். முதல் முரண்பாடானது 1937 ஆம் ஆண்டு ஆசியாவில் இரண்டாம் சீன யப்பானிய போராகவும் மற்றையது ஐரோப்பாவில் செருமனியின் போலந்து மீதான ஆக்கிரமிப்புப் போராகவும் தொடங்கியது. உலகலாவிய அளவில் நடைபெற்ற இந்தப்போரின் போது பெரும்பான்மையான உலக நாடுகள் நேச, அச்சு நாடுகள் என இரண்டாக பிளவுபட்டுப் போரிட்டன. மனித வரலாற்றில் மிகவும் அழிவுமிக்க சம்பவமான இப்போரின் போது 70 மில்லியன் பேர் வரை கொல்லப்பட்டனர்
இப்போரில் தான் முதன்முதலாக அணுகுண்டு பயன்படுத்தப்பட்டது குறிப்பிடத்தக்கது. ஐக்கிய அமெரிக்கா சின்னப் பையன்(little boy), கொழுத்த மனிதன்(fatman)என்று பெயரிடப்பட்ட இரு குண்டுகளை ஜப்பானின் ஹிரோஷிமா, நாகசாக்கி ஆகிய நகரங்கள் மீது வீசியது.
 
அறுபத்தி நான்கு வருடங்களுக்கு முன்பு, அதாவது 1945ஆம் வருடம் ஆகஸ்ட் 6ந் தேதி காலை 8.15 மணி. அமெரிக்க விமானப் படையைச் சேர்ந்த பிரிகேடியர் பால் டிப்பெட்ஸ் ஜப்பானிய நகரமான ஹிரோஷிமா மீது ஒரு பி-29 விமானத்தில் பறந்துகொண்டிருந்தார். அடுத்த சில நொடிகளில் அந்த விமானத்திலிருந்து 16 கிலோ டன் யுரேனிய அணுகுண்டு வீசப்பட்டது. ஒரு பாராசூட் விரிந்தது. சூரியனைப் போன்ற வெளிச்சம் தோன்றியது. அவ்வளவுதான், ஹிரோஷிமா நகரம், நரகமாகியது. பாராசூட் உருகுவதைப் பார்த்துக் கொண்டிருந்த இளம் பெண்களின் கண்கள் உருகின. முகம் வெடித்தது. நகரம் முழுக்கத் தீப்பிடித்து எரிந்தது. வெப்ப நிலை 4,000 டிகிரியைத் தாண்டியது.
இரும்பு உருகி ஓடியது. மனித உடல்கள் ஆவியாகின. உதவிகோரி நீட்டப்பட்ட கைகளிலிருந்த நகங்களும் தோல்களும் உதிர்ந்தன. அணு குண்டு வெடித்த வேகத்தில் நகரம் முழுவதும் இருந்த வீடுகள் நொறுங்கின. உள்ளிருந்தவர்கள் உயிரோடு எரிந்துபோனார்கள். சில நொடிகளில் ஆயிரக்கணக்கானவர்கள் மாண்டனர். அடுத்த ஒரு வருடத்தில் இறந்தவர்களின் எண்ணிக்கை 1,40,000ஆக உயர்ந்தது. இதற்கு மூன்று நாட்கள் கழித்து “ஃபேட் மேன்” என்று பெயர் கொண்ட மற்றொரு அணு குண்டு நாகசாகி நகரத்தின் மீது வீசப்பட்டது. அங்கேயும் இதே பேரழிவு.
அணு குண்டு வீச்சில் தப்பிப் பிழைத்தவர்கள், கதிரியக்கத்தினால் புற்றுநோய் வந்து சாகும்வரை அவதிப்பட்டனர். இந்த பயங்கர அனுபவம் அவர்களது வாழ்வை முழுமையாகப் புரட்டிப் போட்டது. எப்போது நோய் தாக்குமோ, சாவு வருமோ என்ற பயத்திலேயே அவர்கள் வாழ்வைக் கழித்தனர். வாழ்வதைவிட சாவதே மேல் என்ற நிலைதான் அவர்களுக்கு.
இந்த அணுகுண்டு வீச்சு, தொழில்நுட்ப, ராணுவ சாதனையாக சுட்டிக்காட்டப்பட்டது. “வரலாற்றின் மிக மகத்தான தருணம்” என்று இதைக் அழைத்துக் கொண்டார்கள். ஒரு நியாயமான யுத்தத்தில் இந்த அணுகுண்டு வீச்சு அவசியம்; தவிர இதனால் லட்சக்கணக்கான உயிர்கள் காப்பாற்றப்பட்டன என்பதுதான் அமெரிக்க அரசின் அதிகாரபூர்வமான நிலைப்பாடாக இருந்தது. ஆனால், பிற்காலத்தில் வரலாற்று ஆவணங்களை ஆராயும்போது, ஜப்பானியர்கள் முன்பே சரணடையத் தயாராக இருந்தனர் என்பதும் இந்தக் குண்டுவீச்சு தேவையில்லாத ஒன்று என்பதும் தெரியவந்தது. 1963ல் நியூஸ்வீக் இதழுக்குக் கொடுத்த ஒரு பேட்டியில் அமெரிக்க அதிபர் ட்விட் ஐஸநோவர் இதைக் குறிப்பிட்டார்.
இந்தக் குண்டுவீச்சுக்குப் பிறகு, பல அமெரிக்கர்கள் குற்ற உணர்ச்சியில் மருகினார்கள். மன்ஹாட்டன் புராஜக்டின் சயிண்டிஃபிக் டைரக்டர் ராபர்ட் ஆப்பன்ஹைமர், இந்தக் குண்டு “தோற்கடிக்கப்பட்ட எதிரியின் மீது” வீசப்பட்டதாக 1945ல் குறிப்பிட்டார்.
இந்தக் குண்டுவீச்சினால் ஹிரோஷிமா, நாகசாகியில் நிகழ்ந்த பயங்கரமானது, உலகில் அரசியல், ராணுவ அதிகார அடுக்குகளின் உச்சத்தில் இருப்பவர்களுக்கு எந்தப் பாடத்தையும் தந்ததாகத் தெரியவில்லை. இந்த அணுகுண்டு வீச்சினால்தான் அடுத்த 40 ஆண்டுகளை உலகம் கெடுபிடிப் போரில் கழித்தது. நாடுகளை ஆயுதப் போட்டியில் தள்ளியது. ஒருகட்டத்தில் உலகில் இருந்த அணு குண்டுகளின் எண்ணிக்கை 70,000ஐ எட்டியது. இதை வைத்து லட்சக்கணக்கான ஹிரோஷிமாக்களை அழிக்கலாம். ஏன், நம் பூமி அளவிலான 50 கிரகங்களை அழிக்கலாம்.
உலகிலிருக்கும் அணுகுண்டுகளை அழிக்க,அவை பரவுவதைத் நிறுத்த, அவை பயன்படுத்தப்படாமல் தடுக்க,அவற்றை அழிக்க தொடர்ந்து முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டாலும்,முன்னேற்றம் ஏதும் இல்லை. இப்போது உலகில் 20,000அணுகுண்டுகள் இருப்பதாகக் கணக்கிடப்பட்டிருக்கிறது. இவற்றில் 10,000 குண்டுகள் தகுந்த இடங்களில் ஆயத்தமாக நிலை நிறுத்தப்பட்டிருக்கின்றன. இவற்றில் பெரும்பாலானவை உச்சகட்ட உஷார் நிலையில் வைக்கப்பட்டிருக்கின்றன. இவற்றில் 90 சதவீதத்திற்கும் மேற்பட்ட குண்டுகள் ரஷ்யாவிலும் அமெரிக்காவிலும் இருக்கின்றன.
நல்லவேளையாக, கடந்த 64 ஆண்டுகளில் மீண்டும் அணுகுண்டு பயன்படுத்தப்படவில்லை. ஆனால், அப்படி ஒரு அழிவை நெருங்கிய தருணங்கள் பல உண்டு. 1962 க்யூபா ஏவுகணை பிரச்னையின்போது அமெரிக்கா அணுகுண்டைக் கையில் எடுத்தது. 1983ல் ரஷ்யாவில் இருந்த எச்சரிக்கை அமைப்பில் ஏற்பட்ட தவறால் அமெரிக்காவின் ஐந்து ஏவுகணைகள் ரஷ்யாவை நோக்கி வருவதாக தகவல் கிடைத்தபோது, ரஷ்யா அணுகுண்டுகளைத் தயார் செய்தது. 1995ல் நார்வேயிலிருந்து ஒரு ராக்கெட் ஏவப்பட்டபோது, அதை அணுஆயுதத் தாக்குதலாக நினைத்தது ரஷ்யா. 2007 ஆகஸ்ட் 29-30ந் தேதி அணுகுண்டு பொருத்தப்பட்ட ஆறு ஏவுகணைகள் ஏற்றப்பட்ட அமெரிக்க விமானப்படை விமானம் ஏங்கோ சென்றுவிட்டது. அந்த விமானம் எங்கே சென்றது என 36 மணி நேரம் வரை கண்டுபிடிக்கப்படவில்லை.
இப்படி மனிதத் தவறுகளினால் ஏற்படும் அபாயங்கள் போக, வேறு சில பயங்கரங்களும் இருக்கின்றன. உலகெங்கும் இருக்கும் பயங்கரவாதிகள் அணுகுண்டுக்கான மூலப் பொருள்களையும் அதற்கான தொழில்நுட்பத்தையும் தேடிக் கொண்டிருக்கிறார்கள். அவர்களுக்கு அவை கிடைத்துவிட்டால், அணுகுண்டைச் செய்து அதை நிச்சயம் பயன்படுத்துவார்கள். எதிரி நாடு தம்மீது அணுகுண்டைப் பயன்படுத்தாமல் இருக்க அணுகுண்டு வைத்திருப்பதாகப் பல நாடுகள் சொல்கின்றன. பயங்கரவாதிகளிடம் இந்த வாதம் எல்லாம் செல்லாது. தவிர, இணையத் தொழில்நுட்பம் வளர்ந்துவருவதால், ஒரு நாட்டின் அணு ஆயுத கட்டுப்பாட்டை பயங்கரவாதிகள் எளிதில் கைப்பற்றும் வாய்ப்பு இருக்கவும் செய்கிறது.
சுமார் 40 நாடுகளிடம் அணு ஆயுதப் பொருள்கள் இருக்கின்றன. அவை எல்லாமே பாதுகாப்பாக இருப்பதாகச் சொல்ல முடியாது. இணையத்தில் தகவல்கள் கொட்டிக்கிடக்கும் இந்த யுகத்தில், இந்தப் பொருள்களை வைத்து அணு ஆயுதம் செய்யும் தகவல்களை பயங்கரவாதிகள் எளிதாகப் பெற்றுவிட முடியும். தற்போது இருக்கும் அணு ஆயுதப் பரவல் தடை ஒப்பந்தம் போதுமானதாக இல்லை. இதனால் வரும் ஆண்டுகளில் அணு ஆயுதத்தை வைத்திருக்கும் நாடுகளின் எண்ணிக்கை அதிகரிக்கும். 15-20 நாடுகள் அணு ஆயுத நாடுகளாகிவிட்டால், உலகம் உண்மையிலேயே மிக அபாயகரமான இடமாகிவிடும். அணுசக்தி மூலம் மின்சாரம் தயாரிக்கும் தேசங்கள் அணு குண்டு தயாரிப்பதற்கான மூலப் பொருள்களையும் அதற்கான தொழில்நுட்பத்தையும் விரைவிலேயே பெற்றுவிடும் என்பது மற்றொரு அபாயம்.
ஒவ்வொரு நாடும் அணுகுண்டை வைத்திருப்பதற்கு பெருந்தொகையைச் செலவிடுகிறது. 2008ல் அமெரிக்கா மட்டும் கிட்டத்தட்ட 52.4 பில்லியன் டாலர்களை அணு ஆயுதங்களுக்கும் அது தொடர்பான திட்டங்களுக்கும் செலவிட்டது. தனது அணு ஆயுதத் திட்டத்தை மேம்படுத்தவும் அவற்றை வைத்திருக்கவும் சுமார் 29 பில்லியன் டாலர்களை வருடந்தோறும் செலவிடுகிறது அமெரிக்கா. இந்தத் தொகை இந்தியாவின் பட்ஜெட்டைவிட அதிகம். உலகம் முழுவதும் அணு ஆயுதங்களை மேம்படுத்த ட்ரில்லயன் கணக்கில் செலவிடப்படுகிறது. அணு ஆயுதங்களைத் தயார் நிலையில் வைத்திருக்க ஒவ்வொரு நாளும் 110மில்லியன் டாலர்கள் செலவிடப்படுகின்றன.
உலகம் இதே திசையில் தொடர்ந்து செல்லுமானால், தவறின் காரணமாகவோ, வேண்டுமென்றோ அணு குண்டு மீண்டும் பயன்படுத்தப்படும் அபாயம் இருக்கிறது. தற்போதே தடுப்பு நடவடிக்கை ஏதும் எடுக்காவிட்டால் 2013ல் ஒரு அணு ஆயுத யுத்தமோ, உயிரி ஆயுதத் தாக்குதலோ நடத்தப்படலாம் என அமெரிக்கக் குழு ஒன்று எச்சரித்திருக்கிறது.
அணு ஆயுதங்களற்ற உலகை உருவாக்குவதற்கான வழிமுறைகள் முன்பே கூறப்பட்டிருக்கின்றன. ஆனால், அதற்கென காலக்கெடு ஏதும் இல்லாததுதான் கவலையளிக்கிறது. அணு ஆயுதம் வைத்திருக்கும் நாடுகள் எல்லாம் அவற்றை அழிப்பதும், தம் பாதுகாப்புத் திட்டத்தில் அணு ஆயுதத்தைச் சேர்ப்பதில்லை என்று உறுதியளிப்பதும்தான் முதல் படி. அடுத்தகட்டமாக, அணு ஆயுதம் வைத்திருக்கும் நாடுகள் எல்லாம், அணு ஆயுதத்தை தாம் முதலில் பயன்படுத்துவதில்லை என்றும் அணு ஆயுதம் இல்லாத நாடுகளின் மீது பயன்படுத்துவதில்லை என்றும் உறுதியளிக்க வேண்டும்.
 
சுதந்திரம் அடைந்ததிலிருந்தே இந்தியா உலகம் முழுவதும் எந்தப் பாகுபாடும் இன்றி, அணு ஆயுதங்களை இல்லாமல் செய்ய வேண்டும் என்று தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது. அணு ஆயுதங்களை ஒழிப்பது பற்றிய ஐநாவின் சிறப்புக் கூட்டத்தில் இந்தியா இதற்குப் பல திட்டங்களை முன்வைத்தது. உலகில் இருக்கும் அத்தனை பேரழிவு ஆயுதங்களையும் அழித்துவிட வேண்டும் என்றது இந்தியா. 2010ல் அணு ஆயுத பரவல் தடை மறு ஆய்வு மாநாடு நடக்கவிருக்கிறது. அணு ஆயுதங்களை ஒழித்துக்கட்ட வேண்டும் என்று பேசிக்கொண்டே இருப்பதைச் செயலில் காட்ட இந்த மாநாடு ஒரு வாய்ப்பு.
ஹிரோஷிமா தாக்குதலில் இருந்து தப்பிப் பிழைத்த ஒரு முதியவர் “இந்த அச்சுறுத்தலில் இருந்து தப்பிக்க ஒரே ஒரு வழிதான இருக்கிறது. இந்த ஆயுதங்களை முற்றிலும் அழித்துவிடுவதுதான் அந்த வழி. ஒன்று அணு ஆயுதங்களை அழித்துவிட வேண்டும் அல்லது மனிதர்கள் தாம் உருவாக்கிய ஆயுதங்களாலேயே அழிந்து போக வேண்டும்” என்று குறிப்பிடுகிறார். வல்லரசுகளின் காதில் விழுகிறதா?
 
We all know that Hiroshima and Nagasaki
were destroyed in August 1945 after explosion
of atomic bombs.
However we know little about the progress
made by the people of that land during the
past 62 years
THE COLORFUL CITY OF HIROSHIMA NOW
 
 
 
 
 
thanks to 

பல்கலையில் ஜோதிட பாடம் இணைக்கத் திட்டம்: ஆசிரியர் கடும் எதிர்ப்பு!




இந்தியாவில் மதவாத பா.ஜ.கட்சி மத்தியில் ஆட்சி செய்த போது, வரலாற்று பாடத்திட்டங்களை திரிப்பது, மூட பழக்கவழக்கங்கள் மற்றும் பார்ப்பன சடங்கு, சம்பிரதாயங்களை பாடப்புத்தகங்களில் திணிப்பது, சரஸ்வதி வந்தனம் பள்ளிகளில் கட்டாயம் பாடுவது என்பது உள்ளிட்ட பல்வேறு திருத்தங்களை மேற்கொண்டது.
இது கல்வித்துறை  இடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. ஆரியர்கள் இந்தியாவின் பூர்விக குடிகள் என்று பரப்ப வேண்டும் என்பதற்காக ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்துக்கு அனுப்பி வைக்கப்பட்ட இந்திய வரலாறு பாடப்புத்தகத்தை திரும்பி பெற்றது. இந்தப் புத்தகத்தில் ஆரியர்கள் இந்தியாவில் வந்தேறியவர்கள் என்பதை ஆதாரத்துடன் ஆசிரியர்கள் சுட்டிக்காட்டியிருந்தனர்.
இந்ப்த புத்தகத்தின் ஆசிரியர்கள் இந்திய வரலாற்று ஆராய்ச்சி கழகத்தின் மூத்த பேராசிரியர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. இதனால் இந்திய வரலாற்று ஆராய்ச்சி கழகத்தின் தலைவர் மற்றும் உறுப்பினர்களையே பா.ஜ.கட்சி மாற்றியது. அந்த இடங்களில் நடுநிலை வரலாற்று ஆசிரியர்களை நீக்கி விட்டு, பாபரி மஸ்ஜித் இருந்த இடத்தில் தான் ராமர் பிறந்தார் என பொய்யான வரலாறு எழுதிய பி.எல்.குரோவர் என்ற பேராசிரிய‍ரையும், ஆர்.எஸ்.எஸ். ஆதரவாளர்களான வரலாற்று பேராசிரியர்களையும் நியமித்தது. இது தவிர தேசிய கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவனமாக (என்.சி.ஈ.ஆர்.டி) உறுப்பினர்களையும் ஒட்டு மொத்தமாக மாற்றியது.
பிஞ்சு மனதில் நஞ்சை விதைக்க வேண்டும் என்பதற்காக கல்வித்திட்டத்தில் மாற்றங்கள் கொண்டுவர பா.ஜ.கட்சி முயற்சி செய்தது. ஏற்கனவே ஆங்கில கிறிஸ்தவர்களின் முஸ்லிம் விரோத ஒரு பக்க சார்பு வரலாற்றைப் போல, ஹிந்துத்துவா சக்திகளும் தங்கள் பங்குக்கு முஸ்லிம்களை இந்த நாட்டில் இருந்தே விரட்ட வேண்டும் என்ற அடிப்படையில் கல்விக்கொள்‍கையில் பாரிய மாற்றங்களை கொண்டு வந்தன. இதற்காக மத்திய மனித வள மேம்பாட்டு துறையின் அமைச்சராக ஆர்.எஸ்.எஸ். முழு நேர ஊழியரும், இயற்பியல் துறை பேராசிரியருமான முரளி மனோகர் ஜோஷியை நியமனம் செய்தது.
இந்த நிலையில், பா.ஜ.கட்சியின் மதவாத சிந்தனைக்கு அனைத்து மாநிலங்களிலும் கடும் எதிர்ப்பு கிளம்பியது. அந்தக் கட்சி ஆளும் மாநிலங்களில் மட்டுமே இன்று வரை திருத்தப்பட்ட உண்மைக்கு புறம்பான பாசிச ஹிந்துத்துவா தயாரித்த வரலாறு, பாடத்திட்டங்களில் மாணவர்களுக்கு கற்றுத்தரப்படுகிறது. இந்த நிலையில், பா.ஜ. ஆட்சியின் போது மதுரை காமாராஜர் பல்கலைக்கழகத்தில் பல்கலைக்கழக மானியக்குழு அதிக பணம் தருகிறது என்ற காரணத்துக்காக ஜோதிடவியல் படிப்பை அறிமுகப்படுத்தியது. ஆனால் அப்போதைய தி.மு.க அரசு மற்றும் கல்வியாளர்களின் கடும் எதிர்ப்பால் அந்தப் பாடம் வாபஸ் பெறப்பட்டது.
அதேபோல, கல்விஅமைச்சர்கள் மாநாட்டில் கலந்து கொண்ட தமிழக கல்வி அமைச்சர் க.அன்பழகன் சரஸ்வதி வந்தனம் பாடுவது உள்ளிட்ட வரலாற்று திரிபுகளை ஒரு போதும் அனுமதிக்க மாட்டோம் என்று கடும் எதிர்ப்பு தெரிவித்தார். இதற்கிடையே, தற்போது மதுரை காமராஜர் பல்கலைக்கழக ஆட்சிமன்றக்குழு ஜோதிடத்தில் சான்றிதழ் மற்றும் பட்டய சான்றிதழ் படிப்பை தொடங்க திட்டமிட்டுள்ளது. இதற்கு கல்வியாளர்கள் மத்தியில் கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது.
இது குறித்து மதுரை காமராஜர், மனோன்மணியம் சுந்தரனார், அழகப்பா, அன்னை தெரசா ஆகிய பல்கலைக்கழகங்களின் ஆசிரியர்கள் சங்கம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:
"மதுரை காமராஜர் பல்கலைக்கழக ஆட்சிமன்றக்குழு சமூக அறிவியில் பாடத்திற்கான எந்தத் தகுதியும் இல்லாத ஜோதிடத்தில் சான்றிதழ் மற்றும் பட்டய சான்றிதழ் படிப்பை (சர்டிபிகேட் மற்றும் டிப்ளமோ) அறிமுகப்படுத்த திட்டமிட்டுள்ளது. இதனை வன்னமயாக கண்டிக்கிறோம். ஏற்கனவே நிறுத்தி வைக்கப்பட்டு இருந்த ஜோதிட பாடப்பிரிவுகளை மீண்டும் கொண்டுவருவதென்பது போலி சமூக அறிவியலான ஜோதிடத்திற்கு ஒரு அங்கீகாரம் கொடுப்பதும், மவுட்டீகத்தை வளர்ப்பதுமாகும்.
பல்கலைக்கழகத்தில் துணைவேந்தர் இல்லாத நிலையில், பல்கலைக்கழக கல்விப்பேரவை மற்றும் ஆட்சிப்பேரவையில் விவாதிக்காமல் ஜோதிட பாடங்களை மீண்டும் கொண்டுவருவது ஆற்றல்சால் பல்கலைக்கழகமான மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்திற்கு அழகல்ல. எனவே ஜோதிடபாடப்பிரிவுகளை கொண்டுவரும் நடவடிக்கைகளை உடனடியாக கைவிட வேண்டும். பல்கலைக்கழக அதிகாரிகள் அறிவியல் உணர்வினை உயர்த்தி பிடிப்பது அரசியல் சாசன கடமை என்பதையும் உணர வேண்டும்."
இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.

ஏழைகளுக்கு கம்பளி போர்வைகளை வழங்கியது பாப்புலர் ஃப்ரண்ட்


குல்பர்கா: கர்நாடக மாநில பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா சார்பாக குல்பர்கா மாவட்டத்தில் ஏழைகள் குளிரில் இருந்து தங்களை பாதுகாத்துக்கொள்வதற்காக கம்பளிப்போரிவைகளை வழங்கியது.

பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா தற்போது அதிக அளவில் கவனம் செலுத்து வரும் துறையான சமூக மேம்பாட்டுத்து துறையில் மக்களுக்கான அடிப்படை தேவைகளை நிறைவேற்றி வருகிறது.‌ அதன் அடிப்படையில் கர்நாடகா மாநிலம் குல்பர்கா மாவட்டத்தில் குளிரில் இருந்து தங்களை காத்துக்கொள்வதற்காக கம்பளிப்போர்வையின்றி தவிக்கும் ஏழை எளிய மக்களுக்கு கம்பளிப் போர்வைகளை இலவசமாக வழங்கியது பாப்புலர் ஃப்ரண்ட். 

திப்பு சுல்தான் எடுகேஷன் சொஸைட்டியின் தலைவர் வழக்கறிஞர் அஜிமுதீன், பாப்புலர் ஃப்ரண்டின் குல்பர்கா மாவட்ட தலைவர் டாக்டர் டாக்டர் ஹமீது மக்தூமி ஷாஹித் நஸீர், துணைத்தலைவர் செய்யது ஜாகிர் ஆகியோர் கலந்து கொண்டனர்.




தொகாடியா மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் - பாப்புலர் ஃப்ரண்ட்



கோழிக்கோடு:
 விஷ்வ ஹிந்து பரிஷத்தின் அகில உலக தலைவரான பிரவீன் தொகாடியா மீது மாநில அரசாங்கம் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேரள பாப்புலர் ஃப்ரண்டின் பொதுச்செயலாளர் அப்துல் ஹமீது தெரிவித்துள்ளார்.

முஸ்லிம் சமூகம் மற்றும் கிறிஸ்தவ சமூகங்களின் ஓட்டுரிமையை பரிக்க வேண்டும். இதன் பிறகு இந்தியாவை ஹிந்து ராஷ்டிராவாக அறிவிக்க வேண்டும் என்ற தொகாடியாவின் பேச்சு மிகவும் கண்டிக்கத்தக்கதாகும். இந்திய தேசத்தின் இறையான்மைக்கும் அதன் வளர்ச்சிக்கும் எதிரான இக்கருத்தை தெரிவித்துள்ளதால் பிரவீன் தொகாடியா மீது உரிய நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என கேரள பாப்புலர் ஃப்ரண்டின் பொதுச்செயலாளர் அப்துல் ஹமீது செய்தி வெளியிட்டுள்ளார். கொச்சியில் விஷ்வ ஹிந்து பரிஷத் நடத்திய நிகழ்ச்சி ஒன்றில் முழுக்க முழுக்க முஸ்லிம்களுக்கு எதிரான துவேஷ கருத்துக்களையே கூறியுள்ளார். முஸ்லிம்களிடத்தில் இருந்து அடிப்படை உரிமைகள் பரிக்கப்பட வேண்டும் என்று கூறியுள்ளார் தொகாடியா. 

முஸ்லிம்கள் கட்டாய மத மாற்றத்தில் ஈடுபடுவதாகவும், வெளிநாடுகளிலிருந்து கறுப்பு பணங்கள் பெறப்பட்டு இந்துக்களின் நிலங்களை அபகரிப்பதாகவும், இந்து பெண்களை போலியாக காதலித்து மதமாற்றம் செய்வதாகவும் கூறியுள்ளார் தொகாடியா. எந்த ஒரு அடிப்படை ஆதாரமும் இல்லாத இத்தகைய செய்திகளை கொண்டு மத மோதல்களை ஏற்படுத்தவே சங்கப்பரிவாரங்கள் முயற்ச்சி செய்து வருகின்றனர். 

மதசாற்பற்று ஒற்றுமையோடு வாழ நினைக்கும் இந்திய மக்கள் மத்தியில் பிரிவினையை ஏற்படுத்தவும் அதன் மூலம் இரு சமூகங்கள் மத்தியில் கலவரத்தை ஏற்படுத்தும் நோக்கிலேயே பிரவீன் தொகாடியா இத்தகைய நச்சுக்கருத்துக்களை வெளியிட்டு வருகிறார். இதே போன்று கருத்துக்களை வெளியிட்டு வரும் ஹிந்து ஐக்கிய வேதி, விஷ்வ ஹிந்து பரிஷத், பஜ்ரங்தள், மற்றும் ஆர்.எஸ்.எஸ் அமைப்பினர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும். மதச்சாற்பற்று இயங்கும் பிற இயக்கங்களும் தங்களுடைய மெளனமான நிலையை கைவிட்டு இத்தகைய வகுப்புவாத சக்திகளுக்கு எதிராக கண்டனத்தை பதிவு செய்ய வேண்டும் என அப்துல் ஹமீது கேட்டுக்கொண்டார்.

அமெரிக்காவின் நெருக்கடிகளை வேடிக்கை பார்க்கமாட்டோம் - ஈரான் எச்சரிக்கை



ஈரானின் அணு ஆயுத கொள்கையை அமெரிக்கா எதிர்த்து வருகிறது. எனவே, அந்த நாட்டுக்கு எதிராக பொருளாதார தடை மற்றும் எண்ணை வர்த்தகத்தை தடுக்க தீவிர முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. 

இதற்கு ஈரான் கடும் எதிர்ப்பும் கண்டனமும் தெரிவித்துள்ளது. இது குறித்து ஈரான் துணை அதிபர் முகமது ரெஷா ரகிமி விடுத்துள்ள எச்சரிக்கையில் கூறியிருப்பதாவது:-   

ஈரானுக்கு எதிராக பொருளாதார தடை மற்றும் நெருக்கடியை ஏற்படுத்த அமெரிக்கா தீவிர முயற்சி மேற்கொண்டு வருகிறது. அதற்கான பாராளுமன்ற தீர்மானத்தில் அமெரிக்க அதிபர் ஒபாமா கையெழுத்திட்டால் ஈரான் வேடிக்கை பார்த்து கொண்டிருக்காது. 

ஈரானின் ஸ்ரெயிட் ஆப் ஹார்மோஷ் துறைமுகம் வழியாக மற்ற அரபு நாடுகளில் இருந்து செல்லும் அனைத்து எண்ணைக் கப்பல்களையும் விடாமல் தடுத்து வழி மறிப்போம் என தெரிவித்தார்.   

உலகில் எண்ணை வளம் மிக்க முதல் 5 நாடுகளில் ஈரானும் ஒன்று. அங்குள்ள ஸ்ரெயிட் ஆப் ஹார்மோஷ் துறைமுகம் வழியாகதான் அனைத்து எண்ணை கப்பல்களும் தற்போது சென்று வருகின்றன. 
thanks to yarlmuslim

வேண்டாத நாடுகளின் தலைவர்களுக்கு அமெரிக்கா புற்றுநோயை பரப்புகிறதா? வெனிசுலா அதிபர்


அமெரிக்கா தனக்கு வேண்டாத நாடுகளின் தலைவர்களுக்கு ரகசியமாக புற்றுநோயைப் பரப்பி வருகிறதா என்று வெனிசுலா அதிபர் சாவேஸ் கேள்வி எழுப்பியுள்ளார்.  

அமெரிக்காவின் தீவிர எதிர்ப்பாளரான சாவேஸூம் புற்றுநோயால் பாதிக்கப்பட்டார். அவர் தவிர பராகுவே அதிபர் பெர்ணான்டோ லுகோ, பிரேசில் அதிபர் டில்மா ரெüசெஃப், அவருக்கு அடுத்த நிலையில் உள்ள லூயிஸ் ஆகியோரும் இந்த ஆண்டில் புற்றுநோயால் பாதிக்கப்பட்டனர்.

இந்நிலையில் ஆர்ஜெண்டீனா அதிபர் கிறிஸ்டினா பெர்ணான்டஸூக்கு தைராய்டு புற்றுநோய் ஏற்பட்டுள்ள தகவல் புதன்கிழமை வெளியானது.

இது தொடர்பாக சாவேஸ் மேலும் கூறியிருப்பது: இந்த விவகாரம் தொடர்பாக அசட்டையாக எவர் மீதும் குற்றச்சாட்டு கூற நான் விரும்பவில்லை. அவர்கள் (அமெரிக்கா) நவீன தொழில்நுட்பத்தின் மூலம் இவ்வாறு நோயைப் பரப்பியிருந்தால், அது மிகக் கொடூரமான செயல். உண்மையில் என்ன நடந்தது என்பது யாருக்கும் தெரியாது.

ஆனால் லத்தீன் அமெரிக்க நாடுகளில் உள்ள இடதுசாரித் தலைவர்களுக்கு தொடர்ந்து இதுபோன்று நிகழ்ந்து வருவதை இயல்பானது என்று கூறி முற்றிலுமாக ஒதுக்கிவிடவும் முடியாது. இந்த விஷயத்தில் எனக்குத் தோன்றிய கருத்தை நான் வெளிப்படையாகத் தெரிவித்துள்ளேன்.

ஏற்கெனவே 1946- 48-ம் ஆண்டுகளில் கெüதமலா சிறையில் கைதிகளை வைத்து பாலியல் தொடர்பான நோய்களைப் பரப்புவது தொடர்பாக ஆய்வு செய்த நாடுதான் அமெரிக்கா என்றார்.

ஈக்வடார், பொலிவியா நாட்டு அதிபர்கள் மீது இனி கூடுதல் கவனம் செலுத்த இருக்கிறேன். அவர்களுக்கும் புற்றுநோய் இருப்பது கண்டறியப்படலாம் என்று சாவேஸ் நகைச்சுவையாகக் குறிப்பிட்டார்.

எனக்கு புற்றுநோய் ஏற்பட்டபோது கியூபா சென்று அறுவை சிகிச்சை செய்துகொண்டேன். இப்போது நோயின்றி இருக்கிறேன் என்றார்.

முன்னதாக புற்றுநோயை வென்ற லத்தீன் அமெரிக்க நாடுகளின் தலைவர்களின் மாநாட்டை நடத்தப் போவதாகவும் சாவேஸூம் பராகுவே அதிபர் லுகோவும் ஏற்கெனவே ஒருமுறை நகைச்சுவையாகத் தெரிவித்திருந்தனர்.

as
thanks to thedipaar.com

எண்ணெய்க் கப்பல்களை ஈரான் மறித்தால் கடும் விளைவுகளைச் சந்திக்க நேரிடும். அமெரிக்கா எச்சரிக்கை


ஹோர்முஸ் நீரிணையை மூடப் போவதாக ஈரான் அறிவித்துள்ளதை அமெரிக்கா கடுமையாகக் கண்டித்துள்ளதோடு, இதனால் கடுமையான விளைவுகளை சந்திக்க நேரிடும் என எச்சரித்துள்ளது.

ஈரானுக்கு எதிராக பொருளாதாரத் தடைகளை மேலும் விதித்தால் வளைகுடா நாடுகளை இணைக்கும் ஹோர்முஸ் நீரிணையை மூடிவிடுவோம் என ஈரான் சமீபத்தில் அறிவித்திருந்தது.

இது குறித்து அமெரிக்க ராணுவத் தலைமையகமான பென்டகன் செய்தித் தொடர்பாளர் ஜார்ஜ் லிட்டில் செய்தியாளர்களிடம் கூறியது:

உலகின் கச்சா எண்ணெய் தேவையில் 40 சதவீதம் இந்தப் பிராந்தியம் வழியாக எண்ணெய்க் கப்பல்கள் மூலம் கொண்டு செல்லப்படுகிறது. வளைகுடா நாடுகளை இணைக்கும் ஹோர்முஸ் நீரிணையானது பஹ்ரைன், குவைத், கத்தார், சவூதி அரேபியா, ஐக்கிய அரபு எமிரேட்ஸ் ஆகிய நாடுகளின் போக்குவரத்தை இந்திய பெருங்கடலுடன் இணைக்கிறது. இந்தப் பகுதி வழியாக செல்லும் கப்பல்களை மறிப்பது போன்ற நடவடிக்கைகளில் ஈரான் ஈடுபட்டால் அதை ஒருபோதும் ஏற்க முடியாது என்று லிட்டில் குறிப்பிட்டார்.

முன்னதாக ஈரான் துணை அதிபர் முகமது ரெஸô ராஹ்மி பேசுகையில் ஹோர்முஸ் நீரிணை வழியாக ஒரு சொட்டு எண்ணெய் கூட பிற நாடுகளுக்குச் செல்வதற்கு அனுமதிக்கப் போவதில்லை என குறிப்பிட்டிருந்தார். இதற்குப் பதிலடி கொடுக்கும் வகையில் லிட்டில் இத்தகைய எச்சரிக்கையை விடுத்துள்ளார். ஹோர்முஸ் நீரிணையை மூடுவது என்பது ஒரு கோப்பை தண்ணீரைக் குடிப்பதை விட எளிதான செயல் என்று ஈரான் கடற்படை தளபதி அட்மிரல் ஹபிபுல்லா சயாரி குறிப்பிட்டிருப்பதும் அமெரிக்காவை மேலும் எரிச்சலூட்டியுள்ளது.

ஹோர்முஸ் நீரிணை வழியாக போக்குவரத்தை அனுமதிப்பது இப்பிராந்தியத்துக்கு மட்டுமல்ல பிற நாடுகள் வளம்பெறவும் மிகவும் அவசியமாகும். சர்வதேச கடல் பிராந்தியத்தில் போக்குவரத்துக்கு எவரேனும் இடையூறு செய்வார்களேயானால் அதை ஒருபோதும் தாங்கிக் கொள்ள முடியாது என்று பஹ்ரைன் கடற்படை பெண் கமாண்டர் அமி டெரிக் ஃபிராஸ்ட் தெரிவித்தார்.

பஹ்ரைனில் நிலை நிறுத்தப்பட்டுள்ள தங்களது போர்க்கப்பல் இப்பிராந்தியத்தில் சரளமான வர்த்தக போக்குவரத்தைக் கண்காணித்து வருவதோடு அதை சீர்குலைக்க முயல்வோரைத் தடுக்கும் பணியில் ஈடுபட்டுள்ளது என்றார் ஃபிராஸ்ட்.

as
thanks to thedipaar.com

சென்னையில் இருந்து மலேசியாவிற்கு கடத்தவிருந்த ரூ.1000 கோடி மதிப்புள்ள போதைப்பொருள் பறிமுதல்.


இந்தியாவில் இருந்து, மலேசியா உள்ளிட்ட, தெற்காசிய நாடுகளுக்கு போதை மருந்து கடத்தும் கும்பல் சிக்கியது. முதற்கட்ட விசாரணையில், நான்கு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். சர்வதேச சந்தையில், 1,000 கோடி ரூபாய் மதிப்புள்ள, 5,100 கிலோ போதை மருந்து பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
சென்னையை மையமாக வைத்து போதை மருந்து கடத்தும் கும்பல் ஒன்று செயல்பட்டு வருகிறது. இந்தியாவில் மருத்துவத்திற்கு பயன்படும் எபிடிரின், கேடமைன் உள்ளிட்ட மருந்துகள், உலகின் பல்வேறு நாடுகளில் போதைப் பொருட்களாக பயன்படுத்தப்பட்டு வருகின்றன. இதனால், இவற்றை கடத்துவதில் பலர் ஈடுபட்டு வருகின்றனர். கடந்த ஆண்டுகளில், சென்னை வழியாக கடத்தப்பட இருந்த ஏராளமான போதை மருந்துகள் மத்திய வருவாய் புலனாய்வு பிரிவு அதிகாரிகளால் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன; பலர் கைது செய்யப்பட்டுள்ளனர். போதை மருந்து கடத்தலின் பின்னணி குறித்து அவர்களிடம் நடத்திய விசாரணையில் இருந்து பல தகவல்கள் தெரிய வந்துள்ளன.

ரகசிய தகவல்: சென்னை மற்றும் ஐதராபாத்தில் உள்ள சிலர், தெற்காசிய நாடுகளுக்கு எபிடிரின் எனப்படும் போதை மருந்தை கடத்தி வருவதாக சென்னையில் உள்ள மத்திய வருவாய் புலனாய்வு பிரிவுக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து, கூடுதல் தலைமை கமிஷனர் ராஜன் உத்தரவை அடுத்து, சென்னை மற்றும் ஐதராபாத்தில் உள்ள மத்திய வருவாய் புலனாய்வு பிரிவு அதிகாரிகள் இணைந்து விசாரணை மேற்கொண்டனர்.

கடத்தல்காரர்கள் சிக்கினர்: கடந்த 26ம் தேதி நள்ளிரவு, அதிகாரிகள் கொண்ட குழு, ஐதராபாத்தில் உள்ள, ஜிடிமெட்லா என்ற இடத்தில் இயங்கி வரும், எபிடிரின் மருந்து தயாரிப்பு தொழிற்சாலையை கண்காணித்தது. அப்போது, அங்கு நின்றிருந்த ஒரு காரில், சந்தேகப்படும்படியாக இருவர் அமர்ந்திருந்தனர். ஐதராபாத்தைச் சேர்ந்த துர்காராவ், 51; ராம்பாபு, 51, என்ற அவர்களிடம் அதிகாரிகள் விசாரணை நடத்திய போது, எபிடிரின் மருந்தை கடத்துவதை ஒப்புக் கொண்டனர். மேலும், சென்னையில் இருந்து வரும் இருவரிடம் மலேசியாவிற்கு கொண்டு செல்வதற்காக போதை மருந்தை வைத்திருப்பதாகவும் தெரிவித்தனர். அவர்கள் பயன்படுத்திய காரில் இருந்து, 100 கிலோ எபிடிரின் போதை மருந்தை வருவாய் புலனாய்வு பிரிவு அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.

சென்னை பார்ட்டிகளும் சிக்கினர்: ஐதராபாத்தைச் சேர்ந்த இருவர் கொடுத்த தகவலின் படி, சென்னையில் இருந்து ஐதராபாத்திற்கு விமானம் மூலம் வந்த, ராயபுரத்தைச் சேர்ந்த அப்துல் ரஹீம், 42; நாகூர்கனி, 40, ஆகிய இருவரையும் விமான நிலையத்தில் அதிகாரிகள் கைது செய்தனர். அவர்கள் கொடுத்த தகவலை அடுத்து, ஐதராபாத்தில் இயங்கி வந்த எபிடிரின் மருந்து தயாரிப்பு தொழிற்சாலையில் மத்திய வருவாய் புலனாய்வு பிரிவு அதிகாரிகள் அதிரடி சோதனை நடத்தினர்.

கணக்கில் முறைகேடு: இந்த சோதனையின் போது, தொழிற்சாலை நிர்வாகம் ஏற்கனவே தயாரித்து வைத்திருந்த 5,000 கிலோ, எபிடிரின் மருந்து கைப்பற்றப்பட்டது. இது சம்பந்தமாக தயாரித்தல் மற்றும் இருப்பு வைத்தல் என்பதற்கான எந்த ஆவணங்களும் பராமரிக்கப்படவில்லை. மேலும், தயாரிக்கப்பட்ட, 400 கிலோ, எபிடிரின் யாருக்கு விற்பனை செய்யப்பட்டது என்பது குறித்த புள்ளி விவரங்களும் இல்லை. இதையடுத்து, 5,000 கிலோ எபிடிரின் மருந்தை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். பறிமுதல் செய்யப்பட் மருந்தின் மொத்த உள்ளூர் மதிப்பு, 40 கோடி ரூபாய்; சர்வதேச சந்தை மதிப்பு, 1,000 கோடி ரூபாய்.

போதை மருந்து கடத்தல் கும்பல் சிக்கியது குறித்து மத்திய வருவாய் புலனாய்வு பிரிவு கூடுதல் தலைமை கமிஷனர் ராஜன் கூறியதாவது: முதற்கட்ட விசாரணையில் நான்கு பேர் சிக்கியுள்ளனர்; தொடர்ந்து விசாரணை நடந்து வருகிறது. நாடு தழுவிய அளவில் இந்த கும்பலுக்கு நெட் ஒர்க் இருக்கலாம் என்று சந்தேகம் எழுந்துள்ளது. அது குறித்து தீவிரமாக விசாரித்து வருகிறோம். மிக விரைவில் கடத்தல் கும்பல் முழுவதும் சுற்றி வளைக்கப்படும்.இவ்வாறு ராஜன் கூறினார்.

as
நன்றி thedipaar .com