Tuesday, December 28, 2010


மனிதர்களின் ரத்தத்தையும், இயற்க்கை வளங்களையும் உறிஞ்சும்: டாடா!!!

1) 2003 – செப்டம்பரில், டாடா கெமிக்கல்ஸ் நிறுவனத்தின் குஜராத் மாநிலம் மித்னாபூர் சோடா உப்பு ஆலையில் கழிவு நீர்க் கசிவு ஒன்று ஏற்பட்டது. இதனால் கட்ச் வளைகுடாவில் உள்ள தேசியக் கடற்பூங்காவில் 150 ஏக்கருக்கு மேலான நிலபரப்பில் அமைந்துள்ள கடற்பூங்கா மாசுபட்டு போனது. டாடா கெமிக்கல்சின் உப்பளங்கள் அங்குள்ள நிலத்தடி நீரைப் பெருமளவு உப்பு நீராக்கிவிட்டன. டாடா கம்பெனியின் உப்புக் கழிவு நீரைக் கொட்டி வைக்கும் திறந்தவெளிக் கிடங்குகளுக்காக பல கிராமங்களின் விவசாய நிலங்கள் பாழ்படுத்தபட்டன.

2 ) ஜாம்சேத்பூர் மாநகரில் உள்ள ஜூக்சாலைப் பகுதியில் அமைந்துள்ள டாடாவின் இரும்பு எஃகு ஆலை திறந்தவெளியில் ஆயிரக்கணக்கான டன்கள் கொதிகலன் சாம்பலைக் கொட்டி மலை மலையாகக் குவித்திருக்கிறது, . கோடை காலத்தில் அச்சாம்பல் மலைகளில் இருந்து பறந்துவரும் கனரக உலோகத் துகள்கள் நிரம்பிய காற்று சாலைகளில் வாகனங்கள் செல்லமுடியாத அளவுக்கு பார்வையைப் பதிப்பதோடு, சுவாச நோய்களையும் பரப்புகின்றது. மேலும் அப்பகுதி நிலத்தடி நீர் மாசுபட்டு, கடினநீராகி, திடப்பொருட்களின் கரைசல் நிரம்பியதாக உள்ளது.

3) ஜோடா நகரம் இதில் டாடா, பிர்லா, மற்றும் ஜிண்டால் போன்ற கம்பனிகள் இரும்புக் கனிமச் சுரங்கங்களை அமைத்துள்ளன. 1950-களில் இந்நகரம் கனிமவளம் கொழிக்கும் நகராக விளங்கி இந் நிறுவனங்களின் செல்வவளங்களைப் பெருக்கியது; ஆனால், அதனால் அந்த நகரம் ஒரு பயனும் பெறவில்லை. பத்திரிக்கையாளர் தரும் விவரப்படி, ஜோடா நகரமும் அதற்குச் செல்லும் சாலையும் ஒரு பெரிய படுபாதாளக் குழியாக உள்ளது. அடுத்தடுத்து தொடர்ச்சியாக கனிமச் சுமையேற்றிய லாரிகள், இரவுபகலாக 24 மணிநேரமும் நடக்கும் சுரங்கம் வெட்டுதல் பணி, இதனால் மிக மோசமாகத் தூசு கிளப்புவதால் உள்ளூர்வாசிகள், தொழிலாளர்கள், பயணிகள் சுவாசிக்க நல்ல காற்றே கிடையாது.

4) மேற்கு பொக்காரோவில் டாடா எஃகு நிறுவனத்தின் நிலக்கரிச் சுரங்கங்கள் உள்ளன. பொக்காரோவில் உள்ள நிலக்கரி கழுவுமிடத்திலிருந்து நிலக்கரி தூசுகள் நிறைந்த கரிக் குழம்புகள் பொக்காரோ ஆற்றுக்குள் கொட்டப்படுகிறது; இதனால் ஆற்றுப்படுகை முழுவதும் நிலக்கரி சாம்பல் படிந்து ஆறே நாசமடையச் செய்து அழிக்கப்பட்டு விட்டது. நிலக்கரியை கழுவ அங்குள்ள ஆற்றில் இருந்து பெருமளவு தண்ணீர் உறிஞ்சப்படுகிறது. இப்படி கழுவிய பின்னால் வெளியேறும் கழிவு தண்ணீர் மீண்டும் அந்த ஆற்றில் கொட்டப்பட்டு அந்த ஆறு முற்றிலும் நாசம் செய்யப்பட்டது.

5) 1989 மார்ச் மூன்றாம் நாள், டாடா குழுமத்தின் நிறுவனர் நாள் விழாக் கொண்டாட்டம் நடந்தது. அப்போது பிரபலங்களின் இருக்கைப் பகுதியில் திடீரென்று தீப்பற்றிக் கொண்டு விட்டது. அலட்சியம் காரணமாக ஏற்பட்ட இத்தீவிபத்தில் 60 குழந்தைகள் மாண்டு போயினர்; 111 பேர் படுகாயமுற்றனர்; மோசமான ஏற்பாடுகள் காரணமாக உரிய நேரத்தில் விபத்து நடந்த இடத்திற்கு தீயணைப்பு வண்டிகள் போச் சேர முடியாமல் போனது. டாடா எஃகு நிறுவனம்தான் விபத்துக்கு முழுப்பொறுப்பாகும் என்று ஆலைகளுக்கான ஆய்வகம் அறிக்கை அளித்துள்ளது. ஆனால், இத்துயரச் சம்பவம் நடந்து பத்தாண்டுகளுக்கு மேலாகியும் பலியானவர்களின் உறவினர்களுக்கோ, படுகாயமுற்றவர்களுக்கோ டாடா நிறுவனம் இன்னமும் நட்டஈடு வழங்கவில்லை. டாடா இரும்பு எஃகு நிறுவனம் ஆலை விபத்துகளுக்குக் கொடுத்து வந்த நட்டஈடுகளை சுட்டிக் காட்டி, அதே அளவு நீதிமன்ற நடுவரிடம் செலுத்த வேண்டும் என்று உச்சநீதி மன்றம் பிறப்பித்த ஆணையைக் கூட டாடா நிறுவனம் மதிக்காது மறுத்து வருகிறது.

6) 1920-கள் மற்றும் 1930-களில், டாடா இரும்பு எஃகு கம்பெனியின் நிர்வாகத்துக்கு எதிராகப் பழங்குடித் தொழிலாளர்கள் பலமுறை போராடியிருக்கிறார்கள். குறைவான ஊதியம், வேலை நிலைமைகள், ஆகியவை இவர்கள் போராடுவதற்கான முக்கியமான பிரச்சினைகளாக இருந்தன. ஆனால், பல ஆண்டுகளாக, தொழிற்சங்கங்களை உடைப்பதற்கு அடிக்கடி வன்முறை வழிகளில் ஈடுபட்டு பல படுகொலைகளை நடத்தி டாடா கம்பெனி பெயர்பெற்றதாக விளங்கியது.

7) 1991-இல் ரத்தன் டாடா தலைமைப் பொறுப்பேற்றபிறகு ஆட்குறைப்பு மற்றும் நெறிப்படுத்துவதை மூர்க்கமாக டாடா குழுமம் மேற்கொண்டது. 2003-ஆம் ஆண்டு, டாடா ஹைட்ரோ கம்பெனிகள் தொழிற்சங்கத்தைச் சேர்ந்த இரண்டு தொழிலாளர்கள் தங்களுக்குத் தாங்களே மண்ணெண்ணெ ஊற்றிக் கொண்டு டாடா நிறுவனத்தின் தலைமையகத்தின் முன்பு தீக்குளித்தார்கள். டாடா மின்சக்தி கம்பெனியிலிருந்து சட்டவிரோதமாக ஒப்பந்தத் தெழிலாளர்கள் வேலைநீக்கம் செய்யப்பட்டதற்கு எதிர்ப்புத் தெரிவித்துத்தான் அவ்விரு தொழிலாளர்களும் தீக்குளித்து மாண்டனர். டாடாவின் சுதேசி துணி ஆலையை மூடி அடுக்குமாடி குடியிருப்புகள் கட்டி வியாபாரம் செய்ய நினைத்தது டாடா நிறுவனம் இந்த பிரச்சனையில் 2000-ஆம் ஆண்டு ஆலை மூடப்பட்டு, 28000 ஆலைத் தொழிலாளர்கள் அகதிகளாக வீசப்பட்ட போது, சுதேசி ஆலையின் ஒரு தொழிலாளி தற்கொலை செய்து கொண்டார்.

8) குறைந்தது இரண்டு தொழிலாளர் முன்னணியாளர்கள் கடந்த காலத்தில் கொல்லப்பட்டனர். அப்துல் பாரி மற்றும் வி.ஜி. கோபால் ஆகிய இருவரும் நிர்வாகத்துடன் பேச்சு வார்த்தைக்குச் சென்றபோது போட்டி தொழிற்சங்கத்துக்காரர்களால் சுட்டுக் கொல்லப்பட்டனர். இவ்விரு சம்பவங்களிலும் டாடா நிர்வாகம் பின்னணியில் இருந்து செயல்பட்டதாக டாடா தொழிலாளர்களும் சுயேச்சையான பார்வையாளர்களும் குற்றஞ்சாட்டினர்.

9) 1850-களில் இருந்து அந்நூற்றாண்டின் இறுதிவரை சீனாவிற்கு “ஓபியம்” என்ற கஞ்சா போதை மருந்து ஏற்றுமதி செய்வதில் டாடா குடும்பம் ஈடுபட்டிருந்தது. ஓபியம் இந்தியாவில் விளைவிக்கப்பட்டு, ஆங்கிலேயக் காலனியவாதிகளுக்காக டாடா போன்ற தரகர்கள் சீனாவுக்கு ஏற்றுமதி செய்தார்கள். (சீன மக்களை ஓபியம் போதைப் பழக்கத்தில் மூழ்கடித்து அடிமைப்படுத்திக் காலனியாக்கிக் கொள்ள ஆங்கிலேயர்கள் எத்தணித்தபோது அதற்கு எதிராக சீன மக்கள் நடத்தியதுதான் பிரபலமான ஓபியம் போர். ஓபியம் கடத்திக் குவித்த மூலதனத்தைக் கொண்டுதான் துணி ஆலைகளையும் இரும்பு-எஃகு ஆலையையும் டாடா குடும்பம் நிறுவியது.


Monday, December 27, 2010


மறக்க முடியாத மருத்துவர்கள்: அதிரை அஹ்மது

மருத்துவம், மருத்துவமனை பற்றிய கருத்தாய்வும் கருத்துக் கணிப்புகளும் நமதூரில் பேசப்படும் தருணமிது.  இந்நேரத்தில், நம்மூரின் பழமை பற்றியும் ஓர் ஆய்வு தேவைதானே? 

கலந்தர் மரைக்காயர்:  (இவர்களைப்பற்றி ஏற்கனவே 'அதிரை வரலாறு' வலைப்பூவில் தனிக் கட்டுரை இடம்பெற்றுவிட்டது.  அதில் இடம்பெறாத சில தகவல்கள் மட்டும் இங்கே:)

கலந்தர் மரைக்காயர் இறந்த பிறகு, அவருடைய (மனைவி வழி) மூத்த மகன் சேகப்துல்லா காக்கா அவர்கள் தன்னால் இயன்ற, தனது அனுபவத்தின் மூலம் மருந்துக் கடை வைத்து, சில மருந்துகளைக் கொடுத்துவந்தார்.  கலந்தர் மரைக்காயரின் இளைய மகன் மனநிலை பாதிக்கப்பட்டவர்.  அவரும் சில நேரங்களில் 'தொப்பிக்குள் செந்தூரம் இருக்குது; தருகிறேன்' என்பார்.  மக்கள் பைத்தியத்திடம் எப்படி வாங்குவது என்று தயங்குவார்கள்.  அத்துடன் அந்தக் குடும்பத்தின் நாட்டு வைத்திய முறையும் முடிவுற்றது.

செந்தூரம் எனும்போது, சில தனித்தனி வீடுகளில் செந்தூரம் விற்பனையும்   நடந்ததை அறிவேன்.  அவற்றுள் 'செந்தூரக்கார வீடு' என்று பெயர் பெற்றது, இப்போதுள்ள எனது அண்டை வீடு.  'கூனா வீட்டு செந்தூரம்' என்பதும் நடுத்தெருப் பகுதியில் பெயர் பெற்ற ஒன்றாகும்.  அன்றைக்கு வந்ததோ, ஒரு சில நோய்கள்தாம்.  அவற்றுக்கெல்லாம் ஒரே மருந்து, சென்தூரம்தான். 

பெத்தையன்:  இவர் ஒரு நாட்டு வைத்தியர்.  இந்துவாக இருந்தாலும், நமதூர் முஸ்லிம் மக்களுடன், குறிப்பாக நமதூரின் சமூகத் தலைவர்களுடன் நல்ல உறவைக் கொண்டிருந்தவர்.  நாடி பிடித்து நோயைக் கண்டுபிடிப்பதில் வல்லவர்.  மடியில் ரெடியாகச் சில மருந்துகளை வைத்திருப்பார்.  சற்று முதிர்ந்த நோய்களாயிருந்தால், அடுத்த நாள் செய்துகொண்டு வருவதாகச் சொல்லிப் போவார்.  கழுவித் துவைத்துப் பெட்டி போட்டு மடிப்புக் கலையாத வெண்மையான உடையுடன், தோளில் அங்கவஸ்திரத்தொடு காணப்படும் அந்தக் கருமைத் தோற்றமுடைய வைத்தியர் பெத்தையன், காசில்லா ஏழைகளுக்கும் காசுள்ள பணக்காரர்களுக்கும் தன மருத்துவச் சேவையைப் பாகுபாடின்றிச் செய்து பயன் விளைவிப்பார்.

இவர் அதிரை முஸ்லிம்களுடன் இணக்கமாக இருந்ததன் பிரதிபலனோ என்னவோ, அல்லது இவரால் பயன் பெற்ற நல்லடியார் ஒருவரின் துஆவினாலோ  என்னவோ, அவருடைய மகன் இஸ்லாத்தைத் தழுவி, இன்று முஸ்லிமாக வாழ்ந்துவருகின்றார்.  இப்போது அவரும் நாட்டு வைத்தியத் தொழிலை மேற்கொண்டு, தன்னால் இயன்ற பணிகளைச் செய்து வருகின்றார்.

இக்ராம் டாக்டர்:  எனக்குத் தெரிந்தவரை, முதன்முதலாக அதிரைக்கு வந்த ஆங்கில மருத்துவர் இவர்தான்.  அக்காலத்தில், அதிரையில் இவரிடம் மட்டுமே 'அம்பாசிடர்' கார் இருந்தது.  இப்போது இருக்கும் 'மக்தூம் பள்ளி'யின் இடத்தில்  அன்று 'ரிஜிஸ்டர் அபீஸ்' இருந்தது.  அந்த வரிசையின் கடைசிப் பகுதியில் டாக்டரின் மருத்துவமனை இருந்தது.  இக்ராம் டாக்டர் திருச்சியைப் பிறப்பிடமாகக் கொண்டவர்.  உருது தாய்மொழி.  அதிரையில் குடும்பத்தோடு குடியேறி வாழ்ந்து வந்தார்.  மிகவும் கண்டிப்பான ஆள்.  ஆனால், 'கைராசிக்காரர்' என்று பெயரெடுத்தவர்.  அதிரையின் செல்வந்தர் வீடுகளுக்கும், அவரிடம் தொடர்ந்து சிகிச்சை பெற்றுவரும் முதிர் நோயாளிகளுக்கும் மட்டும், அழைப்பின் பேரில் காரில் வந்து சிகிச்சையளிப்பார்.  வீட்டு வருகைக்காகக் கூடுதல் கட்டணம் ரூபாய் ஐந்து சேர்த்துக் கொடுக்கப்படும்.  அவரிடம் கம்பவுண்டராகப் பணியாற்றிய அப்துர்ரஹ்மான் இப்போதும் உள்ளார், செக்கடி மேட்டில் ஒரு சிறிய கடை வைத்துக்கொண்டு.  டாக்டரும் அப்துர்ரகுமானும் திரும்பி வந்த பிறகுதான், மருத்துவமனை மீண்டும் இயங்கத் தொடங்கும்.  அதுவரை நோயாளிகள் பொறுமை காப்பார்கள்!  இந்த டாக்டரை விட்டால் வேறு டாக்டர் இல்லை என்ற நிலைக்காக அன்று; இவர் கைராசிக்காரர் என்பதால்!

நாங்கள் எங்கள் உயர்நிலைப் பள்ளி நாட்களில் நடுத்தெருவில் 'இக்பால் நூல் நிலையம்' என்றொரு நூலகம் நடத்திவந்தோம்.  அந்த நேரத்தில்தான் அல்லாமா இக்பால் அவர்களின் நூற்றாண்டு நிறைவு பெற்றிருந்தது.  இளைஞர்களான  இல்லை, சிறுவர்களான  எம் உள்ளங்களில் நமதூரில் அல்லாமா இக்பாலின் நூற்றாண்டு விழா நடத்தினால் என்ன? என்ற உதிப்பு!  களத்தில் இறங்கிவிட்டோம்!  இடம்: மரைக்காபள்ளி முக்கூட்டு முனை!  பெரிய பந்தல்!  பேச்சாளர்கள்:  டாக்டர் இக்ராம் (உர்து).  'இறையருட்கவிமணி', பேராசிரியர் கா. அப்துல் கபூர் M.A.(தமிழ்).  மாநாட்டுத் தலைவர்:  அ. இ. செ. முஹிதீன் B.A. இன்னும் உள்ளூர் பேச்சாளர்களும் சொற்பொழிவாற்ற, மாநாடு மிகச் சிறப்பாக நடந்து முடிந்தது!

டாக்டர் நெடுங்காடி:  மருத்துவ வசதிகள் குறைவாயிருந்த அந்தக் காலத்தில், நமதூர் அரசு மருத்துவமனையில் பணியாற்ற வந்து சேர்ந்தார் டாக்டர் நெடுங்காடி.  இவருடைய பொதுநலச்  சேவையின் மூலம் அரசு மருத்துவமனை அக்காலத்தில் புகழ் பெற்றிருந்தது. ஆனால் மருத்துவக் கருவிகள் மற்றும் உபகரணங்கள் மிகக் குறைவு.  அவற்றை வைத்துக்கொண்டு, அவர் தரும் சிகிச்சைகள் அபாரமானவை.

நான் மிகச் சிறிய வயதுடையவனாக இருந்தபோது, என் தாயாருக்கு உள்ளங்கையில் ஒரு சிறிய கட்டி.  அதை டாக்டரிடம் காட்டியபோது, ஆபரேஷன் செய்தே ஆகவேண்டும் என்றார்.  இப்போது இருப்பதைப்போல், ஆபரேஷன் தியேட்டர் மற்றும் உபகரணங்கள் எதுவும் இல்லை.  ஒரு மரக் கட்டிலில் படுக்க வைத்துத் தம் பொறுப்பை நிறைவேற்றத் தொடங்கினார் டாக்டர்.  என் கண்கள் நீர் வடிக்க, என் தாயைப் பார்த்துக்கொண்டிருந்தேன்.  கத்தி வைத்தாரோ இல்லையோ, கத்தத் தொடங்கிவிட்டார்கள் என் தாய்.  "ஐயா!  உட்ருங்கோ!" என்று கத்தியபோது பிஞ்சுப் பருவத்தினன் என்னால் பார்த்துக்கொண்டிருக்க முடியுமா?  என்னைத் தடுத்துப் பிடித்து நிறுத்தத் தொடங்கிவிட்டார்கள் பக்கத்தில் நின்றவர்கள்.  அந்தக் காலத்தில் ஆபரேஷன் எல்லாம் தியேட்டரில் நடக்காது.  ஒரு விதமான rude treatmentதான்!  அப்படி இருந்தும், நோய்கள் குணமாகின!  டாக்டர் நெடுங்காடியும் கைராசிக்காரர்தான்.  அப்போதிருந்த dedication, kindness, concentration எல்லாம் மருத்துவர்களிடம் இப்போது குறைவு.   

ஜெர்மன் டாக்டர்:  இந்தப் பெயரில் ஒருவர் தன்னை டாக்டர் என்று கூறிக்கொண்டு நமதூர் தட்டாரத் தெருவில் இருந்த ஒரு வீட்டை வாடகைக்கு எடுத்துக்கொண்டு, தன் 'தொழிலை' ஆரம்பித்தார்.  ஒரு நாள் திடீரென்று குழந்தையாக இருந்த என் மருமகளுக்கு நெஞ்சு வலி வந்துவிட்டது.  நானும் என் நண்பர் அப்துல் கபூரும் தூக்கிக்கொண்டு ஓடினோம், இந்த ஜெர்மன் டாக்டரிடம்.  எடுத்த எடுப்பில், அந்தப் பச்சிளங்குழந்தையின் நெஞ்சில் குத்தினாரே ஓர் ஊசி!  அதிர்ச்சியால் நாங்கள் உறைந்து போய்விட்டோம்!  குழந்தை அலறவே, அவளைத் தூக்கிகொண்டு வீடு வந்து சேர்ந்தோம்.  நடந்ததை வீட்டில் சொன்னபோது, வீட்டாரும் துடித்துப் போனார்கள்.  அல்லாஹ்வின் உதவியால் குழந்தைக்கு ஒன்றும் ஆகவில்லை!  பிறகு தெரியவந்தது, அவர் போலி டாக்டர் என்பது!  கண்வலி என்றால் கண்ணில் குத்தியிருப்பாரோ?

மற்றவை, பின்னூட்டக்காரர்கள் பார்த்துக்கொள்ளட்டும்.  


இந்த கட்டுரைக்கு அதிரைநிருபர் வலைப்பூவில் வந்த கருத்துரைகள். கட்டுரையில் விடுபட்டவர்களை நினைவேந்தி இருக்கிறார்கள். அதனை நன்றியோடு பதிவிடுகிறோம்.

அபுஇபுறாஹிம் சொன்னது…

    ஆஹா மற்றொரு களம் கிடைத்திருக்கிறது... பொருத்திருந்து பாருங்கள்..

    இன்றைய மருத்துவ மனையின் ஒரு விளம்பரம் !

    "இங்கே சிகிச்சைக்கு கூட்டிகிட்டு வாங்க... முடிந்ததும் தூக்கி கிட்டு போங்க" !

    சீரியஸா இருந்தீங்கன்னா நான் பொறுப்பல்ல...
    Wednesday, November 10, 2010 9:21:00 PM 

sabeer சொன்னது…

    ஈஸிச் சேரில் அமிழ்ந்து, கட்டிய கைகளை பிடரியின் பின்னால் தக்க வைத்துக்கொண்டு, எவ்வளவு அழகாக அசை போடுகிறீர்கள் காக்கா!

    வலிக்காத ஊசியாய் சுகமாய் இருக்கிறது கேட்க. அதிரை வரலாற்றின் அதி முக்கிய பக்கங்களை செதுக்குவதுபோல் சேர்த்துத் தருவது உங்களால் மட்டுமே முடியும்.

    நீங்கள் குறிப்பிட்டவர்களில் இக்ரம் டாக்டரின் பெயர் மட்டும் கேட்ட ஞாபகம் இருக்கு.வரலாற்றில் இன்னும் பதியப்படாத பல பக்கங்கள் உங்களுக்காக காத்திருக்கிறது.

    தொடர்ந்து எழுத துஆ.
    Wednesday, November 10, 2010 10:55:00 PM 

அபுஇபுறாஹிம் சொன்னது…

    டாக்டர் இபுறாஹிம் - அதிக நாள் இருந்த இடம் புதுப்பள்ளிக்கு எதிரில்தான் பனிமனை, இவரைக் கண்டாலே எனக்கு ரோஸ் கலரில் இருக்கும் சர்பத் போன்ற திரவம் அடங்கிய பாட்டில்தான் ஞாபகத்திற்கு வரும். ஆஸ்பத்திரி வாடைன்னா அங்கேதான் தெரியும் அப்படி ஒரு விதமான மருந்து வாடை இருக்கும் அவரின் மருத்துவ மனையில், மாத்திரைகள் தினத் தந்தி பேப்பரில் மடித்து தரப்படும்.
    Thursday, November 11, 2010 12:13:00 AM 

crown சொன்னது…

    அஸ்ஸலாமு அலைக்கும்.சாச்சாவின் மற்றுமொரு கலக்கல் நினைவுப்பதிவுகள்.சாச்சாவுக்கு எழுத்துக்காக மருத்துவப்பட்டம் கொடுக்கலாம். நான் அழைக்கப்போவது டாக்டர் அஹமது சாச்சா.அல்ஹம்துலில்லாஹ்.இக்ராம் டாக்கரைப்பற்றிய அதிக "டாக்"(TALK) கேள்விபட்ட்டிருக்கிறேன். சாச்சா சொன்ன சில ராசி கார டாக்டர் நான் சொல்லப்போவது நிசமாவே கைராசிக்காரர்.என் பெரியம்மாவின் உம்மாவுக்குச்சொந்தம்.எப்படி ராசிக்காரர்ன்னா சில நேரம் சீரியஸாக இருக்கும் சிலருக்கு இவர் வந்து வைத்தியம் பார்த்தவுடன் அடங்கிவிடும்.(மொவ்தாகிவிடுவார்கள்)அப்படிதான் என் பெரியம்மாவின் உம்மாவுக்கு உடம்பு சரியிலை என் ராத்த சொன்னாங்க உடனே அந்த" "கூட்டிகிட்டு வா. நான் என் பெரியப்ப மகனுடன் சேர்ந்து அவர கூட்டிகிட்டு வர கிளம்பினேன். அப்போது நான் சொன்னேன் எப்படியும் உம்மாமா இறக்கப்போகுது நாம அடக்கத்துக்குள்ள வேலைய பாக்கனுன்னு.ஏன்டா அப்படிய் சொல்ரே?ன்னு பெரியப்ப மகன் கேட்டான். நான் சொன்னேன் வெற என்ன இந்த டாக்கரை கூட்டிகிட்டு வரச்சொல்லிடாங்களே! அதுபோல் கூட்டி வந்தோம் .வந்து கையைபிடித்தார். சில நிமிடங்களிலேயே அவர்கள் இறந்து போய் விட்டார்கள்.இதுபோல் பலமுறை நடந்துள்ளது.இது நடந்த சம்பவங்கள். நகைச்சுவைக்காக எழுதபடவில்லை.
    Thursday, November 11, 2010 1:10:00 AM 

crown சொன்னது…

    அஸ்ஸலாமு அலைக்கும்.அதனாலேயே எங்கவீட்ல யாருக்காவது உடம்பு சரியில்லைன்னா. நான் துஆ கேட்பது இப்படித்தான் யா அல்லாஹ் அந்த டாக்டரின் வைத்தியத்திலிருந்து எங்களை காப்பாத்துன்னு.என் சகோகதரர்கள்,என் தாய் என்னை ஏசுவார்கள்.அடிக்க வருவார்கள்.ஆனால் நான் மறைக்காமல் சொல்லிவிடுவேன் என் குடும்பம் முக்கியம் ரிஸ்க் எடுக்க அனுமதிக்க மாட்டேன்.காரணம் ராசி என்பதை விட அவர் அப்டேட் இருப்பதில்லை பழய வைத்திய முறைதான்.
    Thursday, November 11, 2010 1:17:00 AM 

அபுஇபுறாஹிம் சொன்னது…

    எழும்பு முறிந்தால் காட்டுவோமே (மாவு)டாக்டர்,அவர் எடுப்பாரே பெண்டு ஆஆஆ.... அந்த வலியிருக்கே!, எங்களுக்குல தெரியும்... :(

    "எப்படி ஏற்பட்டுச்சுன்னு கேட்பார்" அந்த மருத்துவர் - விளையாடும் போது கீழே விழுத்துட்டேன்னு சொல்லி கிட்டு இருக்கும் போதே இப்படியா மடங்குச்சுன்னு பெண்டு எடுப்பாறே இன்னும் வலிக்குது, , ஆனால் no side effect so are..
    Thursday, November 11, 2010 9:48:00 AM 

'ஒருவனின்' அடிமை சொன்னது…

    பிறகு தெரியவந்தது, அவர் போலி டாக்டர் என்பது! கண்வலி என்றால் கண்ணில் குத்தியிருப்பாரோ?
    அடப்பாவி?அப்போதே இப்படி போலி டாக்டர்கள் உருவாகியாச்சா?
    Thursday, November 11, 2010 11:27:00 AM 

அன்புடன் மலிக்கா சொன்னது…

    மருத்துவர்களை மரியாதையாக உயிர்காக்க உதவும் உத்தமர்களாக நினைக்கிறோம். ஆனால் சிலநேரம் அவர்கள் பிறர் மானத்தையே
    சூறையாடும் சுகபோகர்களாக திரிகிறார்கள் இவர்களைபோல்..

    மரக்கட்டை மனிதர்களால் மானத்திற்கு ஆபத்து.
    http://kalaisaral.blogspot.com/2010/11/blog-post_10.html..
     Thursday, November 11, 2010 12:24:00 PM 

அபுஇபுறாஹிம் சொன்னது…

    வாங்க ஒருவனின் அடிமை... ! வரவேற்பது என் வழக்கம் ! அடிக்கடி வருவது உங்கள் வழக்கம்(ஆக்கிட வேண்டியதுதானே) !
    Thursday, November 11, 2010 3:32:00 PM 

jaleelsa சொன்னது…

    இன்னும் இக்ராம் டாக்டரைப்பற்றி மரக்காத சில..
    நமதூர் பெண்கள்,
    டாக்டர் : என்ன பன்னுது?
    நோயாளி: நெஞ்சுக்குள்ளே என்னமோ பன்னது
    டாக்டர் : அப்பரம் என்ன பன்னது?
    நோயாளி: ஒரே படபடப்பா வருது
    டாக்டர் : அப்பரம்!!?
    நோயாளி: ஒரே ஹொதரத்தா வருது
    டாக்டர் விசயத்தை புரிந்துகொண்டு மாத்திரையை
    மடித்து கொடுத்து விடுவார்.
    Thursday, November 11, 2010 6:19:00 PM 

Shahulhameed சொன்னது…

    டாக்டர் ராஜு அதிரை அரசு மருத்துவ மனைக்கு வந்த புதிதில் கடற்கரை தெருவில் கிணறு சுத்தாம் செய்ய இறங்கிய மூன்று பேர் விஷ வாயு தாக்கி இறந்து போனார்கள் அவர்களின் சடலங்களை புதிதாக வந்த டாக்டர் ராஜு தான் பிரோத பரிசோதனை செய்து முடித்தார் அதன் பின் அவருக்கு ஜுரம் வந்து ஒரு வாரம் மெடிகல் லீவில் போய்விட்டார்.
    Thursday, November 11, 2010 6:19:00 PM 

அபுஇபுறாஹிம் சொன்னது…

    டாக்டர்களிடம் அழைத்துச் செல்லும் குதிரை வண்டிக்காரர்கள் இருக்கிறார்களே அவர்களுக்கும் தெரியும் என்ன வியாதிக்கும் எந்த டாக்டர் கைராசி அல்லது சீக்கிரம் குணம் அடையும் என் காது பட நிறைய கேட்டிருக்கேன், ஒரு குறிப்பிட்ட குதிரை வண்டிக்காரர் அவருக்கு அடை மொழியும் உண்டு (அந்தப் பெயரை தவிர்க்கிறேன் இங்கே) எந்தத் தெருவுக்குச் சென்றாலும் டாக்டரிடம் போ என்றுதான் சொல்லுவார் அவர் தானாகச் சென்று அந்தக் குறிப்பிட்ட டாக்டரின் மருத்துமனை வாசலில் நிற்கும் விதம் ஆச்சர்யத்தை கொடுக்கும், இதனை மற்ற சகோதரர்கள் யாரும் கண்டோ அல்லது கேள்விபட்டோ இருக்கலாம் !
    Thursday, November 11, 2010 7:54:00 PM 

ZAKIR HUSSAIN சொன்னது…

    சகோதரர் அதிரை அஹ்மதுவின் மலரும் நினைவுகள் மற்றவர்களுக்கும் ஓர் மீள்பார்வை. இக்ராம் டாக்டர் Black & whiteல் லேசாக தெரிகிறார். மற்ற மருத்துவர்கள் நம் காலத்துக்கு முன் என நினைக்கிறேன்.
    Thursday, November 11, 2010 9:28:00 PM 

Shahulhameed சொன்னது…

    அபுஇபுறாஹிம் சொன்னது…
    ஒரு குறிப்பிட்ட குதிரை வண்டிக்காரர் அவருக்கு அடை மொழியும் உண்டு (அந்தப் பெயரை தவிர்க்கிறேன் இங்கே) எந்தத் தெருவுக்குச் சென்றாலும் டாக்டரிடம் போ என்றுதான் சொல்லுவார் அவர் தானாகச் சென்று அந்தக் குறிப்பிட்ட டாக்டரின் மருத்துமனை வாசலில் நிற்கும்


    அது அவரின் திறமையா அல்லது குதிரையீன் திறமையா என்பது எனக்கு இதுவரை "வெளங்கவில்லை"
    Thursday, November 11, 2010 11:28:00 PM 

தாஜுதீன் சொன்னது…

    அதிரை வரலாற்றில் மறக்க முடியாதவர்களை மருத்துவர்களை ஞாபகப்படுத்தியமைக்கு மிக்க நன்றி.

    ஒரு காலத்தில் தேள் கொட்டினால் மனிதன் பிழைப்பது என்பது அறிதாக இருந்தது. அதுவும் ஒரு குழந்தைக்கு கொட்டினால்...

    டாக்டர் இபுறாஹிம் அவர்கள் என் வாழ்வில் மறக்க முடியாதவர்கள்.

    30 வருடங்களுக்கு முன்பு எனக்கு ஒன்றரை வயது இருக்கும் போது என்னை "தேள்" கொட்டிவிட்டது, உடல் ஊதா நிறத்திற்கு மாறிவிட்டது, விட்டில் அனைவரும் அதிர்ச்சி பயத்தில் இருந்த அவ்வேலையில், என் அன்பு பெரியப்பா அவர்கள் தன் தோளில் என்னை தூக்கிச் சென்று இபுறாஹிம் டாக்டரிடம் சென்றார்கள். தைரியசாலியான என் பெரியப்பாவும் என் உடல் நிலையை பார்த்து நம்பிக்கை இழந்துவிட்டார்களாம். ஒன்றரை வயது குழைந்தையான எனக்கு தன் treatmentயை முறையாக செய்தார்கள் டாக்டர் இபுறாஹிம், அல்லாஹ்வின் உதவியால் நான் அன்றே குணம் அடைந்தேன். அந்த மனுசனின் நம்பிக்கையான மருத்துவ சேவையை இன்றும் என் பெற்றோரும், என் சகோதரரும், வீட்டில் உள்ளவர்களும் ஞாபகப்படுத்துவார்கள். இது போன்ற நல்லவர்களுக்காக என்றும் நம் துஆ செய்யவேண்டும்.

    அல்லாஹ் போதுமானவன்.
adirai Ahamed

Friday, December 24, 2010


அதிகார அடுக்குகளில் ஒளிந்து கசியும் இந்துத்துவம்.

குஜராத் துவங்கி கோவை வரை.................

இந்திய தேசத்தின் நிழல் கருமையாய் இருப்பதை காவியாய் மாற்ற நூற்றாண்டுகளாக இந்துத்துவ சக்திகள் முயன்றுகொண்டே இருக்கின்றனர். இந்தியாவை இந்துக்களின் நாடாக மாற்ற அவர்கள் செய்யும் கலவரங்களும், படுகொலைகளும் தொடர்ந்து கொண்டே இருக்கிறது.


அவர்கள் செய்யும் நேரடிக் கலவரங்கள் உடனடியாக மதச்சார்பற்ற சக்திகளால் கண்டிக்கப்படுகிறது. எதிர் வினையாற்றப்படுகிறது.

ஆனால் இந்திய ஆளும் அதிகார வர்க்கத்தில் அவர்கள் ஊடுருவி சட்டப்பூர்வமாய், நீதியின் பெயரால், அதிகாரத்தின் பெயரால், அறத்தின் பெயரால் செய்யும் கொலைகளும் தவறுகளும் வெளியில் தெரிவதில்லை.

இது காவி அதிகாரிகள் மீதான விசாரணைக் காலம். அதிகார அடுக்குகளில் மறைந்து நின்று பல்லிளிக்கும் இந்துத்துவம் குஜராத் துவங்கி கோவை வரை நடத்திய அராஜகத்தின் அம்பல காலம் இது.

“குற்ற எண்ணிக்கையின் அடிப்படையில் ஒப்பிடும்போது இந்தியாவில் செயல்படும் குற்றவாளிக் கும்பல்களில் எதுவும் நிறுவனப்படுத்தப்பட்ட குற்றவாளிக் கும்பலாகிய இந்திய போலிசின் அருகே கூட நெருங்க இயலாது. ரொம்பவும் பொறுப்புணர்வுடன் இதை நான் சொல்கிறேன்”

இது அலகாபாத் உயர்நீதிமன்ற நீதிபதி ஏ.என்.முல்லா அவர்கள் உத்தரப் பிரதேசத்திலுள்ள ஷாகாபாத் காவல்துறையினர் குறித்த தீர்ப்பில் 1961 ஆம் ஆண்டு குறிப்பிட்ட வாசகங்களாகும்.
இந்தத் தீர்ப்பை பார்த்து அதிர்ந்த உத்தரப்பிரதேச அரசு காவல்துறையில் நல்லவர்களும் இருக்கிறார்கள் அவர்கள் பொருட்டாவது இந்த தீர்ப்பை மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்று மேல்முறையீடு செய்தது.

இந்த முறையீட்டை தள்ளுபடி செய்த நீதியரசர் முல்லா கூறினார் “ஒரு கூடை நாறிய மீன்களில் நல்லமீனை தேடும் முட்டாள் நானல்ல” என்றார்*.

பாவம் இன்றைய காவல் துறையின் வளர்ச்சியை அறியாதவர். நீதியரசர் இன்று தீர்ப்பளித்திருந்தால் “நல்ல மீன்களே இல்லாத நாறிய கூடையில் நல்ல மீனை தேடச் சொல்லாதே” என்று கோபப்பட்டிருப்பார்.

இந்தியாவில் மனித உரிமை மீறல்கள் சம்பந்தமான புகார்களில் 60 சதம் காவல்துறையின் மனித உரிமை மீறல்கள் தான் பதிவாகிறது. பதிவானவைகள் தான் 60 சதம் பதிவாகாமல் இன்னும் எத்தனையோ?

காவல் நிலையக் கொலைகள், கடுமையான சித்திரவதைகள், பாலியல் கொடூரங்கள், மூன்றாம்தர சித்திரவதைகள், என்கவுண்டர் கொலைகள் என பட்டியல் நீண்டுகொண்டே இருக்கிறது. அதைவிட மிகப்பெரிய அவலம் குஜராத்தில் தங்களது பதவி உயர்வுக்காக இஸ்லாமிய மக்களை போலி என் கவுண்டரில் படுகொலை செய்வது அதிகரித்துக்கொண்டே இருப்பது.

யாருக்காக? எதற்காக?

கடந்த 2010 ஜூலை மாதம் 22 ஆம் தேதி சி.பி.ஐ அதிகாரிகளால் ஒரு முன்னாள் அமைச்சர் வீட்டின் கதவில் விசாரணை சம்மன் ஒட்டப்பட்டது. அந்த அமைச்சரின் வீட்டுக் கதவில் அது ஒட்டப்பட்ட காரணம் அதை அவர் வாங்காததுதான். அந்த அமைச்சர் அமித் ஷா. குஜராத்தின் நரேந்திர மோடி அரசின் உள்துறை இணை அமைச்சராக இருந்தவர். மத்திய புலனாய்வுத் துறையால் கைது செய்யப்பட்ட இவர் சபர்மதி சிறையில் அடைக்கப்பட்டு 3 நாள் விசாரனை செய்யப்பட்டார். இவர்மீது மத்திய புலனாய்வுத் துறை விசாரணை செய்யும் காரணத்தை அறிய 2005 நவம்பர் 26 தேதியில் நடந்த சம்பவத்தை முதலில் தெரிந்துகொள்ள வேண்டும்.

அன்றைய தினம் சொராபுதின் ஷேக் மற்றும் அவர் மனைவி கௌசர் பீ ஆகியோர் ஆந்திரப் பிரதேச அரசு வாகனத்தில் மகா ராஷ்ட்ராவில் குஜராத் காவல்துறையால் விசாரணை என்ற பெயரில் கடத்தப்படுகின்றனர். இருவரும் பிணங்களாக அடையாளம் காணப்பட்டனர். அவர்கள் இஸ்லாமிய தீவிரவாதிகள் என முத்திரை குத்தப்பட்டனர்.

அந்த என்கவுண்டர் கொலையை பார்த்த ஒரே சட்சி துள்சி பிரஜாபதி அவரும் மார்ச் 2006 ஆம் ஆண்டு என்கவுண்டரில் காவல்துறையால் படுகொலை செய்யப்படுகிறார். சொராபுதின் ஷேக் மரணத்திற்கு நீதி கேட்டு, சொராபுதின் ஷேக் தீவிரவாதி அல்ல என சொல்லி அவரது அண்ணன் ரபாபுதின் உச்சநீதிமன்றத்தின் கதவுகளை தட்டுகிறார். உச்சநீதி மன்றம் மத்திய புலனாய்வுத் துறையை இவ்வழக்கை விசாரணை செய்யச்சொல்லி பணிக்கிறது. மத்திய புலனாய்வுத்துறை இந்த என்கவுண்டர் கொலைகள் திட்டமிட்ட கொலை என்றும் இதில் அந்த மாநில முன்னாள் உள்துறை துணை அமைச்சர் சம்பந்தபட்டிருக்கிறார் என அவரை கைது செய்தது.

மற்றொரு சம்பவம். 2004 ஜூன் 15 இஸ்ரத் ஜஹன், ஜாவீத் ஷேக், சீஷன் ஜோஹர், அம்ஜத் அலி ரானா ஆகிய நண்பர்கள் அகமதாபாத் அருகில் உள்ள நரோடாவில் காரில் பயணம் செய்யும் போது குஜராத் காவல்துறையால் என் கவுண்டரில் படுகொலை செய்யப்பட்டனர். அவர்களுக்கு லஷ்கர்-இ-தொய்பா என்ற தீவிரவாத இயக்கத்துடன் தொடர்பு இருப்பதாக காவல்துறை திரைக்கதை எழுதியது.

ஆனால் இதுவும் போலி என்கவுண்டர் கொலைகள் என மத்திய புலனாய்வு அதிகாரிகள் கண்டுபிடித்தனர்.

இதற்கு கொல்லப்பட்ட இளம் பெண் இஸ்ரத்தின் தாயார் ஷமீமா நீதிமன்றத்தின் கதவை தட்டியதுதான் காரணமாகும். இப்படி குஜராத்தில் கடந்த சில ஆண்டுகளில் 34 என்கவுண்டர் கொலைகள் நடந்துள்ளது.

இவைகள் ஒவ்வொன்றையும் விசாரித்தால்தான் இன்னும் உண்மைகள் வெளிவரும். இந்தப் படுகொலைகள் நடந்திட காரணம், ஆட்சியில் உள்ள இந்துத்துவ மதவெறியர்கள் மத்தியில் தங்களது பராக்கிரமங்களைக் காட்டி பதவி உயர்வு பெறத் துடிக்கும் அதிகார வர்க்கத்தின் பதவி வெறியாகும்.

மற்றொன்று இஸ்லாமிய தீவிரவாதம் என்ற பூதத்தை காட்டி இந்துத்துவ வெறியை முடிந்த அளவு மக்கள் மனங்களில் விதைப்பது.

இந்த மதவெறிதான் ஆர்.எஸ்.எஸ் காணும் அகண்டபாரதம் என்பதை உருவாக்கும் என நினைக்கின்றனர்.

பாட்னா, அஜ்மீர், கான்பூர், மலேகாவ், தானே, கோவா, நாந்தட், ஹைதராபாத் அகிய இடங்களில் இந்து மதவெறியர்கள் வைத்த வெடிகுண்டுகள் குறித்த விசாரணை ஒவ்வொன்றாக வெளிவந்துகொண்டிருக்கும் சூழலில் அவர்கள் அம்பலப்பட்டு நிற்கும் நிலை உருவாகி உள்ளது.

இஸ்லாமிய தீவிரவாதம் என்ற பூதம் குஜராத்தில் மட்டுமல்ல தமிழகத்திலும் பயன்படுத்தப்பட்டு அப்பாவி இஸ்லாமிய இளைஞர்கள் பழிவாங்கப்பட்டதும் நடந்தது.

குஜராத் வடிவம் மாறி கோவையில்...
2006 ஜூலை மாதம் கோவையில் வெடி குண்டுகளுடன் தீவிரவாதிகள் கைது, தொடர் குண்டு வெடிப்பு நடத்தி தமிழகத்தில் நாசவேலைக்கு சதி, கோவையை அடுத்து சேலத்துக்கும் ஆபத்து, போலிஸ் அலுவலகங்களை தகர்க்க சதி என்று பத்திரிகைகள் கொட்டை எழுத்துகளில் செய்திகளை வெளியிட்டன.

1998 பிப்ரவரி 14ஆம் தேதி நடந்த கொடூர குண்டு வெடிப்பு சம்பவத்தின் ரணங்கள் இன்னும் மக்கள் மனங்களில் இருந்ததால் மக்கள் அதிர்ந்து போனார்கள்.

மேலும் நமது ஊடகங்கள் தங்கள் வசதிக்கும் கற்பனைக்கும் தகுந்தவாறு செய்திகளை முந்தித்தந்தனர்.

இந்து தலைவர்களை தீர்த்துக்கட்ட சதி, கோவையில் கைதான தீவிரவாதிக்கு கேரள குண்டு வெடிப்பில் தொடர்பு, மும்பை தீவிரவாதிகளுடன் தொடர்பு, என்று அடுத்த நாளும் தொடர்ந்தது.

ஒசாமா பின்லேடன் கோவை வந்து தீவிரவாதிகளுக்கு திட்டம் தீட்டி தந்தார் என்று மட்டும்தான் எழுதவில்லை. நீண்ட தாடி, தலப்பாக்கட்டுடன் யாரும் கண்ணில் தட்டுப்படாத காரணத்தால் இதை எழுதவில்லை போலும். தீவிர வாதிகள் கைது செய்யப்பட்டதால் சதி அனைத்தும் முறிய டிக்கப்பட்டது என்று ஊடகங்கள் கூறி முடித்தன.

என்ன நடந்தது? 2006 ஜூலை 22 அன்று நள்ளிரவில் ஹாரூன் பாஷா, மாலிக் பாஷா, அதீக்குர் ரஹ்மான் (எ) போலேசங்கர், ரவி (எ) திப்புசுல்தான், சம்சுதீன் உள்ளிட்ட ஐந்து பேரை கோவை போலிசார் கைது செய்தனர். பைப் குண்டுகள், மேப்புகள் கைப்பற்றப்பட்டன. சதியை திறமையாக முறியடித்த உளவுத்துறை உதவி ஆணையர் ரத்தின சபாபதி, போத்தனூர் பி-13 இன்ஸ்பெக்டர் பால்ராஜ் ஆகியோருக்கு கமிஷனர் கரண் சின்கா பாராட்டு.

அப்போது தமிழகத்தின் அனைத்து செய்திகளும் பின்னுக்குப் போய் மீடியாக்களில் இந்த வெடிகுண்டு குறித்த விவாதங்களே ஆக்கிரமித்திருந்தது.

ஆனால் காவல்துறையினர் தயாரித்த கதையில் ஆங்காங்கு ஓட்டை இருந்ததால், காவல்துறையின் நடவடிக்கையில் சந்தேகம் கொண்ட பத்திரிகைகள் மறுபக்கத்தை தேட ஆரம்பித்தன.
சில தகவல்களைத் திரட்டின. ஆனாலும் சதியின் முழுபரிமாணத்தையும் அவர்களால் காணமுடியவில்லை.

அதே நேரத்தில் கைதான ஹாருன் பாஷா குறித்து இருந்த நன்மதிப்பு முறையான நீதிவேண்டும் என கோவை முஸ்லிம் ஐக்கிய ஜமா அத் உள்ளிட்ட பல இஸ்லாமிய அமைப்புகள் களம் இறங்கிவிட்டது.

கமிஷனர் உள்ளிட்ட உயரதிகாரிகளிடமும் முறையிட்டன. அதிகார வர்க்கத்திற்கு மனு போட்டனர். எதிர்ப்புக் குரல் வலுக்கவே, முதலில் உதவிகமிஷனர் நிஜாமுதீன் தலைமையில் விசாரணை நடந்தது. சில சந்தேகங்களை எழுப்பியதோடு விடை காணாமலே அவரும் விடைபெற்றார். வழக்கு சிபிசிஐடி-யின் வசம் போனது. அதன் சிறப்புப் புலனாய்வுக்குழு தலைவராக ஆர்.பாலன் களமிறங்கினார்.

ஏறத்தாழ 15 மாதகாலம் கடுமையான விசாரணையை மேற்கொண்டார். நிதானமாக உண்மைகளை உறுதி செய்துகொண்டார். அவர் எடுத்திருக்கும் வழக்கு மிகவும் நுட்பம் வாய்ந்தது மட்டுமல்ல, தேசபாதுகாப்போடு சம்பந்தபட்டது. எனவே அறிவியல் பூர்வமான தரவுகளையும் சேமித்துக்கொண்டார்.
அவரது விசாரணையின் துவக்கத்திலேயே தமிழக காவல்துறையின் கேவலமான வன்மம் மிகுந்த அணுகுமுறை தெரிந்தது.
இருப்பினும் நீண்ட விசாரணைக்குப் பின் தன்னுடைய இறுதி அறிக்கையில், கீழ்வருமாறு எழுதி முடித்தார்

“பி-13 போத்தனூர் காவல் நிலையத்தில் குற்ற எண் 1067/2006 இல் இந்திய தண்டனை சட்டப்பிரிவு 120 (பி) 2/இ- வெடிபொருட்கள் சட்டம் 1908, பிரிவு-5இன் கீழ் பதிவு செய்யப்பட்ட முதல் தகவலறிக்கை மற்றும் வெடிகுண்டுகள் கைப்பற்றப்பட்டதாகச் சொல்லப்பட்டு, அதற்காக தயாரிக்கப்பட்ட கைப்பற்றல் மகஜர்கள் அனைத்தும் ஜோடிக்கப்பட்டவை, பொய்யானவை என்று என்னுடைய விசாரணையில் தெரிய வந்தது.
மேலும் என்னால் பதிவு செய்யப்பட்ட சாட்சியங்களும், வாக்குமூலங்களும் மேற் கூறப்பட்ட தகவல்களை அறுதியிட்டு உறுதிப்படுத்துகின்றன. எனவே, இது பொய் வழக்கு என்று கூறி இவ்வழக்கை நான் முடிக்கிறேன்.’’

அவர் நீதிமன்றத்திற்கு சமர்ப்பித்த அறிக்கையில் மேலும் கூறுகிறார் “காவல்துறை அதிகாரிகளைத் தவிர, மற்ற சாட்சிகளிடம் நடத்தப்பட்ட விசாரணையில் கிடைத்த அனைத்து சாட்சியங்களும், மேற்படி வழக்கும் முற்றிலும் பொய்யாக புனையப்பட்ட வழக்கு என்பதையும், மேலும் இந்த வழக்கில் கூறப்பட்டதைப் போல வெடிகுண்டுகள் ஏதும் கைப்பற்றப்படவில்லை என்பதையும் உறுதிப்படுத்தும் விதமாக உண்மைகள் வெளிவந்துள்ளது” என்று கூறுகிறார்.
அதாவது காவல் துறையினர் தீவிரவாதிகள் என்று கைது செய்யப்பட்டவர்களிடமிருந்து வெடிகுண்டு கைப்பற்றப்படவில்லை.

அப்படியாயின் ஏது அந்த வெடி குண்டு? யார் செய்தது? யார் போலிஸ் வசம் கொடுத்தது? வெடிகுண்டு செய்பவர்களோடு காவல்துறைக்கு உறவா? அல்லது அவர்களே வெடிகுண்டுகளை செய்தார்களா? தமிழக அரசாங்கம் விசாரித்ததா? விசாரிக்க வேண்டாமா? உண்மை வெளிவந்துவிட்டதால் வெடிகுண்டே இல்லை என்று கூறுவார்களா? அப்படியெனில் வெடி குண்டு வழக்கு ஏன் புனையப்பட்டது?

அடுத்து காவல்துறையினர் எப்படி திருட்டுத்தனமாக நடந்துக்கொண்டனர் என்பதற்கு அசைக்க முடியாத அத்தாட்சியை தருகிறார்.

குற்றம்சாட்டபட்டு கைது செய்யப்பட்ட 5 நபர்களின் வீட்டுக்கும் ஆய்வாளர் பால்ராஜ் என்பவர் தன்னுடன் ஒரு உதவி ஆய்வாளர், எட்டு தலைமைக் காவலர்கள், ஒரு காவலர், ஒரு கிராம நிர்வாக அலுவலர், ஒரு வருவாய் அலுவலருடன் சென்று கைது செய்ததாக முதல் தகவல் அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.

ஆனால் அவை அனைத்தும் பொய்யானவையாகும். எப்படி கண்டுபிடிக்கப்பட்டது தெரியுமா.

இவர்கள் அனைவரும் சென்று கைது செய்யப்பட்டதாக கூறும் நேரத்தில் காவல் நிலையங்களில் நடக்கும் வருகைப் பதிவு நிகழ்வில் (ரோல் கால்) போத்தனூர் மற்றும் குனியமுத்தூர் காவல் நிலையங்களில் கலந்துகொண்டதாக காவல் நிலைய பொது நாட்குறிப்பில் பதியப்பட்டுள்ளது.

ஆக இவர்கள் கைது செய்யச் சென்றது பொய்யாக இருக்க வேண்டும்.

அல்லது காவல் நிலையத்தில் பொய்யாக எழுதி இருக்க வேண்டும்.

இரண்டும் உண்மையாக இருக்க முடியாது.

இது அப்பட்டமான விதிமீறல். அதே போல கிராம நிர்வாக அலுவலர் மற்றும் வருவாய் அலுவலருடன் சென்றதாகச் சொன்னதும் பொய்யானதுதான். இதை விசாரணையில் அவர்களே ஒப்புக்கொள்கின்றனர். இன்னும் நிறைய விபரங்கள் காவல்துறையை அம்பலப்படுத்துகிறது அந்த அறிக்கை.

யார் குற்றவாளிகள்...
பொய்வழக்கு புனையப்பட்டு சிறைக்குள் அடைக்கப்பட்ட அந்த இளைஞர்களின் வாழ்க்கையில் அந்த நேரத்தில் அடைந்த துன்பத்தை வார்த்தைகளால் வடிக்க முடியாது.

ஒரு மாதகால சிறைவாசம், விசாரணையில் பட்ட மன உலைச்சல். அந்த ஐந்து குடும்பங்களும் அடைந்த வேதனை. சமூகத்தில் பட்ட அவமானங்கள். குண்டு மீண்டும் வெடிக்குமோ என்ற பீதி. அதனால் அதிர்ந்து போன அப்பாவி மக்கள்.

இதற்கெல்லாம் என்ன நடவடிக்கை?
இந்த காயத்திற்கு மருந்திடுவது யார்?

சி.பி. சி.ஐ.டி அறிக்கை அளித்து இரண்டு மூன்று ஆண்டுகளாகியும் பொய்யான குற்றச்சாட்டு புனைந்து பீதியை உண்டாக்கிய போலீஸ் அதிகாரிகள் மீது எந்த நடவடிக்கையும் இல்லை.

எந்த தண்டனையுமின்றி வெடிகுண்டு தயாரிப்பாளர் ரத்தினசபாபதி அதே கோவையில் மது விலக்கு பிரிவு கூடுதல் கண்காணிப்பாளராக தொடர்கிறார்.

இந்த சம்பவம் நடந்தது கலைஞர் ஆட்சியில்தான்.

காவல் துறையின் மீது குற்றம்சாட்டப்பட்டதும் அவர் ஆட்சியில் தான். சிறுபான்மையினர் நலன் காப்பதாக தம்பட்டம் அடித்துக்கொள்ளும் கலைஞர் இதுவரை மவுனம் சாதிப்பது எதனால்.

மைனாரிட்டி திமுக என அதிமுக தலைவி பேசியதை பார்த்து கொதித்தெழுந்து கோவையில் பேசிய முதல்வர் “ஆமாம் நாங்கள் மைனாரிட்டிதான் அதாவது மைனாரிட்டியை ஆதரிக்கும் மைனாரிட்டிகளின் ஆட்சி” என்று வார்த்தை ஜாலங்களை வீசுகிறார்.

வார்த்தைகளை அடுக்கி விளையாடும் எளிதான காரியமல்ல இது. குஜராத்தைப் போல அதிகாரத்தின் அடுக்குகளில் மறைந்து தனது கோரமுகத்தை இந்துத்துவா நிறுவுவதை எதிர்த்து சமர் புரிய வேண்டிய தருணம் இது. பெரியாரின் சுண்டு விரலை பிடித்து வந்ததாக தம்பட்டம் அடிப்பவர் என்ன செய்ய போகிறார்?

(ஆதாரம்: கோவை போலீஸ் நடத்திய வெடிகுண்டு நாடகம். இலக்கிய சோலை- 25, பேரக்ஸ் சாலை, பெரியமேடு, சென்னை-600003

Thursday, December 23, 2010


இந்திய முஸ்லிம்கள் செய்ய வேண்டியது என்ன

22.12.10